புதன், 11 ஜூலை, 2012

விடிவா...? முடிவா...?


விடிக இருளே விடிவா முடிவா 
இளகிடச் சொல்லிடு வல்லவன் தேரினில்
சார்வ தாள்வதும் சாரத்தி லாழ்வதும் 
கூடில்லா சூழும் சுமை..

இனிதும் இயல்பாய் கனிந்து விடிய
இனமெனும் சூழலி னாட்சி கரையறுக்க
ஈரத் துளிகள் இமையோடு வாட
உணர்வ தறியா கனல்....


கபடநாடி காலத்தே காணு மியந்திரச்
சங்கத் திலாடு மகமே யுணர்வாய்
கனவிடிய காலைக் கதிரு மெதிரே
தருண முதிர்க்கும் மலர்....

முற்று வதறிந்தே கற்றெதிர் தீண்டும்
சுடுங்காற் றினிலாட விட்டாய் இயலா
இனமானேன் தள்ளாடி தப்பிப் பிழைக்க
தானே மருந்தா னேன் ..


4 கருத்துகள்:

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃகபடநாடி காலத்தே காணு மியந்திரச்
சங்கத் திலாடு ஃஃஃஃ

வாசிக்கும் போதே திருவிளையாடல் பாடல் மனதில் ஓடுது சகோ... நல்ல நடை...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிந்திக்க வைக்கும் வரிகள் சார்... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

முத்தரசு சொன்னது…

பட்டவர்த்தனமாக உங்கள் பாணியில் - கொளுத்துங்க

Thozhirkalam Channel சொன்னது…

தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
95666 61214/95666 61215

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி