சனி, 17 டிசம்பர், 2011

இறுக்கும் கயறு


சிறகுகள் விரிய சருகுகள் உதிர
சலசலக்கும் ஓசை திசை மாறிய
தேசம் வசைப் பாடிய கூட்டம்
வர்ணிக்க செவி யுதிர்க்கும்

உதிரம் உணர்வன்றி திரிக்கும்
தகிப்பில் தகனமாகும் குணம்
அகத்தே சமைக்க அடைத் தேடும்
குருவி கூடில்லா மிச்சம்

அச்சுருத்த வச்சிருத்தும் சுவை
வகையில்லாச் சூடி மிகையல்லா
மிடுக்கும் சுரமில்லா சறுக்கும்
சாரத்தில் இறுக்கும் கயறு


8 கருத்துகள்:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அருமை.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கேரளாகாரனை திட்டுராப்ல இருக்கு ஹி ஹி ஆனா புரியலை...!!!

ருத்ரன் சொன்னது…

அருமைய இருக்கு...

Thoduvanam சொன்னது…

நல்ல இருக்கு .ஆனா மையக் கருத்து சரியா எனக்கு புரியலைங்க..நாளுக்கு நாள் அசத்துறிங்க..

நாய் நக்ஸ் சொன்னது…

இங்க பாரு ...இனி நீ விளக்க உரை போடலை ....

தெரியலை என்ன வேணா ஆகும் ...சொல்லிப்புட்டேன் ....இனி உங்க இஷ்டம் ...

Unknown சொன்னது…

அருமயா இருக்குய்யா

ஹேமா சொன்னது…

என் பார்வையில் ஈழம் கண்டேன் கவிதையில்.நல்லதொரு கவிதை தினேஸ் !

உணவு உலகம் சொன்னது…

தாங்கள் சொல்ல வரும் கருத்தை நச்சுன்னு அறைந்தார்போல் சொல்லியிருக்கீங்க நண்பரே.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி