செவ்வாய், 20 செப்டம்பர், 2011

மலரிதழ் மனம் எங்கே ...?

நரனின் பாதகை நவிலும் நடை
நாடகந் தாவிய நாரணன் மாயையோ
நின்நிலை நிகழ்வனச் சாடும்
நீதியின் முகம் காணேன்

தகனமிலா தன்னுடல் தாவும்
தானுமிலா தாகம் தயை புரிய
தினமிலா திகைப்பு திரிக்கொண்டெரிய
தீச்சூடி தீயன அழியுமோ

மலரிதழ் மனமெங்கும் மழலையே
மானுடம் வேடமே...! மணந்தெங்கும்
மிகையிலா பகையாள மாண்டன
மீள விலைக் கூறும்.... 

13 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வடைக்கு உங்க பாஷையில் என்னா கவிஞரே....சாரி புலவரே...???

நிரூபன் சொன்னது…

முகர்ந்து பார்த்தறியும் பூனையின் மண நுகர்ச்சி பற்றிய கவிதையினைத் தந்திருக்கிறீங்க.

ரசித்தேன்.

Rathnavel Natarajan சொன்னது…

புகைப்படம் அருமை.

வெளங்காதவன்™ சொன்னது…

:)

#அருமை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதைக்கான படம் அருமை...
எப்பவும் போல் உங்க கவிதை பல முறை படித்து கொஞ்சம் புரிந்தாலும் அருமை... அருமை.

காந்தி பனங்கூர் சொன்னது…

அருமையான கவிதை.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

புகைப்படமும் கவிதையும் சொல்வது என்ன?

செல்வா சொன்னது…

விரைவில் இந்த மாதிரி மரபுக் கவிதைகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன் அண்ணா :)))

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கோமாளி செல்வா said...
விரைவில் இந்த மாதிரி மரபுக் கவிதைகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன் அண்ணா :)))//



நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டே....

Nisha சொன்னது…

"Maanudam Vedame" miga arumai!

Unknown சொன்னது…

//கோமாளி செல்வா said...
விரைவில் இந்த மாதிரி மரபுக் கவிதைகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன் அண்ணா :)))////

நானும்..


இதுவும் கூட நாடகந் தாவிய நாரணன் மாயையோ?

vettha.(kovaikavi) சொன்னது…

ஓ! தினேஷ் ரெம்பக் கடினமாக இருக்கிறது விளங்கிட. அம்மாடியோ! பொல்லாத மரபுக் கவிதையாக உள்ளது. வாழ்த்துகள் தினேஷ். என்னால் இப்படி எழுத முடியாது. தொடருங்கள் வருவேன்.
வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wordpress.com

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கொஞ்சம் புரிஞ்சுது ஹி ஹி

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி