திங்கள், 26 ஜனவரி, 2015

மனிதன் மிருகம் தான்...!


சலாம் போட்டு சலாம் போட்டு
குனிந்தே போகிறான் தமிழன்
யாரென்ற எண்ணம் தொட்டு
உலவ மறக்கிறான்
குல்லா போட்டு குல்லா போட்டு
குனிந்தே போகிறான் காவலன்
யாரென்ற எண்ணம் தொட்டு
உணர மறக்கிறான்
அள்ளி போட்டு அள்ளி போட்டு
அளவை குறைக்கிறான் ஊழியன்
தானென்ற எண்ணம் தொட்டு
உழைக்க மறக்கிறான்
தள்ளி போட்டு தள்ளி போட்டு
தடை விதிக்கிறான் சட்டம்
பொதுவென்ற எண்ணம் எட்ட
ஏனோ மறுக்கிறான்
துள்ளி ஓடும் துள்ளி ஓடும்
ஆட்டு குட்டியே உன் மனதின்
கள்ளமிலா உள்ளம் இல்லா
மனிதன் மிருகம் தான்

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சந்தேகமேயில்லை...

UmayalGayathri சொன்னது…

உண்மைதான்

KILLERGEE Devakottai சொன்னது…


அருமை நண்பரே....

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை தினேஷ்.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி