திங்கள், 26 ஜனவரி, 2015

குடியான தினம் ...!!



கொடி வணக்கம் கொடி வணக்கம்

கோடி கோடி மக்கள் கூடி
தனையிழந்து தேசம் காக்க...!

நேசம் கொண்டு மாண்டு மாய்ந்த

சினம் கொண்டு சீறிப்பாய்ந்த
சிங்கங்கள் எத்துனையாயிரம்...!!

முதல் வணக்கம்...! எந்தன் முழுவணக்கம்...!


ரத்தசரித்திர யுத்த பூமியாய்...!
நித்தம் காட்சி தரும் ருத்ரதாண்டவம்...!
தேசம் சுமந்து தேசம் சுமந்து
நேசம் வளர்த்து பாசம் செழித்து
பகலெல்லாம் இருளாகி பாடுபட்டு
பெற்ற சுதந்திரம் குடியான தினம் ...!!

சுற்றம் மட்டும் சூழ வேண்டும்

சுற்றியுள்ளோன் மாள வேண்டும் 
யுத்தம் செய்ய எத்தனிக்கும்
கள்ளத்தனம் எட்டி பார்க்கும்
இன்றையர்க்கும் குடியான தினம்...!!

ஒருநாள் வேடிக்கை,- இதுவே

அவர்களின் வாடிக்கை..!!


யுத்தங்கள் ஆயிரம் சப்த்தம்
கேளா செவியடைத்து செந்நீர் 
பருகும் கூட்டம் மாளுமன்று 
திருநாளாய் வருமென்று
திகைப்போடு எதிர்நோக்கி...?

திருந்தபோகும் திருத்தப்பட்ட நாள் 
இன்றைய தினமாக மாறாதோ...?!

3 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

இரசிக்கவைக்கும் வரிகள்.பகிர்வுக்கு நன்றி
இனிய குடியரசு தினவாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை தினேஷ்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி