திங்கள், 30 டிசம்பர், 2013

புதிராகும் பூக்கள்...!


ஆண்டு கடந்ததோ ஆண்டவன் பாக்யவான்
மாண்டு கடந்ததோர் கூட்டமே மக்களெனும்
பக்குவம் யாரறிவர் குட்டகுட்ட குனிந்தே
பிறக்கிறது ஏழ்மை விடியல்...

ஆறடி தானெங்கும் மெய்யே அறியாது
ஆள்வது பொய்யே புரியாத பூவுக்குள்
பூகம்பம் உண்டே உணரா ஊழ்வினை
தாக்குவ தர்மமென நில்லும் நிழல்...

உதிப்பது உனக்கென புலம்பாது ஆர்பரிக்க
விதிபதப் பயனது பிதற்றாது அர்பனிக்க
மதிசுடும் கனமது அதர்ம விற்பதம்
கதிதொடும் கரணமே தருணம்...

வாக்கபட்டு சீர்அமைய நாமதிக்கும் வாக்கிய
வார்த்தைகட்டு உள்ளின் உடையென ஈர்க்கும்
வழிதனில் வார்ப்புகள் வெட்டவெட்ட கோர்வை
கிளையாகும் ஞானக் கலையாதல் அழகு...

ஆடுவ தாடும் படியாடும் கூடும்
குடியாடும் பாடும் படியும் யாதும்
குறையா வதுமேது தீதும் நிறை
காண்ப தரிதென தீரும்...

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... அருமை...

வாழ்த்துக்கள்...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி