வியாழன், 22 நவம்பர், 2012

விடியல் விளையேன் ......!



விழியே வழியே விடியல் விளையேன் 
விதையாய் மடியேன் விழுதாய் மறந்தே 
மதியே மலர்வாய் விதியணிச் சூதனமே
சொற்படியாய் மாறும் உனது 

சுரமாய் அருள்வாய் வரமே யாவர்க்கும் 
மனமே மகிழு சுடர்விடும் மருந்தாய் 
இயலு மினிதே இணைத்திடு உயர்வாய் 
அழைத்திடும் ஆணவ மடங்கும் 

எதிரும் புரியா ததிரும் நிலையே
நிகழால் வகுத்திட நிழலும் நிறையாய்
சூடும் பிறைமதி மறையா திருக்கும்
கவனித்தாளு மனமே உலகு


சகலமும் சமமானதோ சகதியில் புழுவானதும்

மனமது தூவளிலே தினமேந்தும் தாகத்திலோ
அலைமகள் தரைத்தட்ட தொடுவானம் மழைக்கொட்ட
மனமெல்லம் சினம்நீங்கி சுவையானதே.......

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்... வார்த்தை சொல்லாடல் அருமை...

மனமெல்லம்-மனமெல்லாம்

Chitra சொன்னது…

Super :-)

ஆத்மா சொன்னது…

அழகு
ரசித்தேன்

Meena சொன்னது…

கவிதை அருமை. அனைவர்க்கும் சினம் நீங்கி மனம் சுவையாக வேண்டும். இறைவன் அருள் புரிவாராக!

முத்தரசு சொன்னது…

வாவ்....அசத்தல்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி