புதன், 3 அக்டோபர், 2012

தனியே தகிக்கும் தணல் ......!

அன்றள்ளும் மலர்போல நின்றெங்கும் வாழி
இளவட்ட முகம்கொண்ட இன்னோர்க்கு தாயே
நிறங்கண்டு நிலைப்பாடா நியதியை கூறும்
நிகரென்றும் பாராமல் கொடும்.......!

கடனூர் கொடும்பாவை தடகளனூர் தவசி
கண்டனூர் கொண்ட திங்கள நாதன்
செல்லுமிடம் மெல்லும் யாவும் நிலைக்கடல்
தாண்டியத் தெப்பத்துள் அடகு.........!

வீற்றுமிட மளித்தான் யாற்றும் பணிகள் 
யாவுமென் கதியே நாவுமென் சதியே 
கனவிடும் காரியன் நிகழ்விட தாரிகன் 
புகலிட மேவியன் தாழ்......!

முடிவுடை வடிவுடையா விடிவுடையே
தடைவிதித் தஞ்சம்புகா எஞ்சுவ தஞ்சும் 
நாளையரின் வாகைப்பாடும் தாகமே 
தனியே தகிக்கும் தணல் ......!

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வித்தியாசமான சிந்தனை வரிகள்...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி