வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

ஆடி வெள்ளி ...!


ஆடி வெள்ளி அன்னை
அன்பை அள்ளித் தந்தாள்
நாடி வந்து மண்ணில்
நாளும் விந்தைச் செய்தாள்
ஆடும் தந்தை தன்னில்
ஆளப் பாகம் தந்தார்
தேட லுந்த உள்ளத்
தேரில் ஆடி வந்தாள் (அன்னை)
மாரி அம்மன் தாயே
மனமி ரங்கி வாநீ
நேரி லுன்னைக் காண
நிலவும் தர்மம் நீயே
வாரி அள்ளித் தாரும்
வசந்தம் எந்தன் தேவி
பாரில் வள்ளல் நீயே
பசிக்கும் உண்ண வாநீ
கூழும் அருந்த வாரும்
கும்பஞ் சோறூம் தாறோம்
ஏழை எதையும் பாறோம்
இன்னல் மட்டும் தீரும்
வாழ வழிகள் போதும்
வந்து உண்டால் போதும்
சோழ மன்னன் ஆண்ட
சொர்க்கம் எங்கள் பூமி

3 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


கவிதை அருமை சகோ...

Yarlpavanan சொன்னது…

சிறந்த கண்ணோட்டம்

புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம்...

நலம் நலமே ஆகுக.

தங்களை ஒரு தொடர் பதிவில் இணைத்திருக்கிறேன்...
முடிந்தால்... முடியும் போது எழுதுங்கள்...

http://vayalaan.blogspot.com/2015/11/12.html

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி