செவ்வாய், 31 டிசம்பர், 2013

வாழ்த்தி வணங்கும் பொழுது...!


என்னெண்ணம் வர்ணம் குழைத்து எழுதி
நிறப்ப வழிதனை வாழ்த்தி வணங்கும்
பொழுதினைப் போல் வந்துபோகும் யாவும்
பதறாது ஏற்றுக்கொள் வாழ்வு சிறக்கும் ...

வயகாட்டு வேலியெல்லாம் ஆளும் பயங்காட்டும்
வாக்கபட்ட சோலையெல்லாம் வாழ்த்தும் - ஆசை
வழிகாட்ட வாழ்க்கை நெறியுணர்த்தும் தோரணம்
வறுமை நிறங்காட்டும் ஆறறிவர்...

மேய்த்து பார்த்தான் மேய்ப்பன் மெய்யை
மெய்யாய் பொய்யின் புன்னிய அலங்காரம்
புலப்பட பெருந்தியாகம் போர்த்தி பெருகிடும்
தீயுள் வேள்விதனை வார்த்தான் ...

உள்ளவனைக் காண்பதும் உள்ளிலா தவனை 
காண்பதும் நேர்படும் நிலைக்கேற்ப வேறுபட
தன்னிலை கோர்க்கும் அருந்தேன் மருந்தாய்
வருந்தும் வதன மாற்றமே யுனைசாரும்...

கரையா மனதே கரையும் தொடத்தொட
நீளும் தொடராய் படரும் முல்லைக்கு
பாக்யம் சரமேறி கார்குழல் கூட்டில்
குடியாவ தன்று ஒருநாளே...

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் அருமை...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை அருமை தினேஷ்...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி