வியாழன், 6 ஆகஸ்ட், 2015

வருக வேல் முருகா...!


தனதன தான தனதன தான
.. தனதன தான .. தனதான
அகமன தாக அழகுரு மாயை
...அரிதென வாக ... அடையாரும்
...அலைகட லாக அதனுரு மேவி
...அலைவது லோக ... அடையாலம்
பகடைக ளாட வழிவுரு மாற
...பகைவனு மாள ... பலனாகும்
...பகலவ னாளு மயமுரு வாக
...படைகள மாக ... அருள்வாயே
சுகமன மேற அடர்வன மாயை
...சுருதியி லாட ... மயமானேன்
...தகுதியி லாது நிகழுவ யேது
...தரமது மாட ... மலராக
மகவென ஆன மழலையு மாகி
...மனமொடு ஆள ... பிறவாயே
...வருகவெ வாழ வழியது மாகி
...வளமொடு மாயை ... உடனால
-மோ.தினேஷ்குமார்-

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


புதுமையான வரிகள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை தினேஷ்...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி