அம்பலத்தான் ஆடவந்தான் கண்டுகொண்டேன் அம்பலத்தே
அம்பலத்தான் ஆடலிடை மெய்மறந்தேன்
மும்மலத்தின் மூலமவன் கண்டுகொண்டேன் அம்பலத்தே
முந்திவருந் தேடலிடை உள்ளொளியாய்
சந்ததிதான் சாட்சியவன் கண்டுகொண்டேன் அம்பலத்தே
சந்தமிசைத் செந்தமிழால் அன்புருக
வந்தெதிரே ஆடிவந்தான் கண்டுகொண்டேன் அம்பலத்தே
வாழ்வளிக்கும் எம்பெருமான் என்னுயிரில்
கந்தனவன் தேடிவரக் கண்டுகொண்டேன் அம்பலத்தே
கண்ணயரக் காரியமாய்க் கட்டுண்டேன்
சொந்தமென நாடிவரங் கண்டுகொண்டான் அம்பலத்தே
சொர்க்கமினி வேண்டுவனாச் சொக்கநாதா
எண்ணமெனும் ஏட்டினையும் கண்டுகொண்டேன் அம்பலத்தே
எண்ணமற்று ஏற்றிடவே தாயுமானான்
வண்ணமாக வானுயரக் கண்டுகொண்டேன் அம்பலத்தே
வானிறங்கி ஆடவந்தான் அம்பலத்தே