அடிமைச் சங்கிலி உடையட்டும்
அரிதா அப்பனை உணரட்டும்
ஆருயிர் அங்கமே அனர்த்தம்தான்
ஆவுடை அப்பனின் நிறுத்தம்தான்
இடியும் மின்னலும் இடர்ப்பட்டு
இனியும் உன்னிலே அகலட்டும்
ஈரடித் திக்கிலும் படரட்டும்
ஈரமே நெஞ்சினில் கசியட்டும்
உடுக்கை மேனியே அடிக்கட்டும்
உடுக்க ஓவென உருகட்டும்
ஊரினில் திங்களும் திகழட்டும்
ஊற்றிடும் பங்கெனப் பழகட்டும்
எடுத்த ஏடதை நடத்தட்டும்
எனக்குள் யாதுமாய்த் துடிக்கட்டும்
ஏட்டினில் பாடெனப் பணிக்கத்தான்
ஏழையின் கூடெனில் அடைபட்டான்
ஐயனே அப்பனே அழைத்தாயோ
ஐந்தது வானவா அணைத்தாயோ
ஒடிய ஒன்றன ஒருவட்டம்
ஒளிரும் தன்னிலே சுடரெட்டும்
ஓவெனக் கூத்தது தொடங்கட்டும்
ஓயாதுக் கூத்தனின் நடனம்தான்
ஓளவையின் அன்பெனப் பொறுத்தாடு
ஔடதம் அங்கென வழங்கட்டும்
ௐ நமசிவாய ௐ நமசிவாய ௐ நமசிவாய
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக