சூடிய நாமம் தெளிவாய் நடராசா
சூதன மாயை மதுவாய்
பாடிடத் தாகம் தணியாய் நடராசா
பாதையின் பாரம் படியாய்
தேடியத் தோணித் துணிவாய் நடராசா
தேனென மேகத் திரளாய்
ஆடிட ஆவல் அருளாய் நடராசா
ஆணவம் தீர அணையாய்
ஓடிடுங் காளைக் கருணா நடராசா
ஓய்வென வேண்டாச் சுடராய்
வாடிடும் பாவைப் படர்ந்தாள் நடராசா
வாழிய வாடா மலராய்
ஈடிணை யற்ற உயர்வே நடராசா
ஈவதுன் ஈரம் துணையாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக