திங்கள், 19 ஜூலை, 2010

நான்

நான் சந்தோஷத்தில் உள்ளேனா
சங்கடத்தில் உள்ளேனா நானறியேன்
தினம் என் உறக்கத்திற்கு வேண்டும்
சிறிதளவு மது
மாது கண்டு மயங்கேன்
மல்லிகை வாசம் கண்டு
கண்டாலென்ன அறியும்
அன்பும் பாசமும்
அளவறியாது பருகிநேனோ என்ன?
பணம் எனும் பிணம்
என் அன்பு பாசத்தை பருகியதேன்
காலம் வரையறுத்த வாழ்வு
வாழ்ந்து தான் பார்ப்போமே
நெஞ்சின் வலிமையோடு ................

திங்கள், 5 ஜூலை, 2010

வலிகள்

நெருங்கி செல்ல
செல்ல ................
தொலைவில் செல்லுமாம்
கானல் நீர்..............
வாழ்ந்து பார்த்தால்
புரியும் வாழ்கை.........
வரிகள் மாறாமல்
வாசித்துபார்............
பிழைகள்
திருத்தப்படும்...........
வாக்கு தவறாமல்
வாழ்ந்துபார்............
வலிகள்
திருத்தப்படும்...........

வியாழன், 1 ஜூலை, 2010

நினைவு

கண்ணோடு இமையாக
நனையாத குடையாக
நினைவெல்லாம் நீயாக
நிலையில்லா நிழலாக
நீயின்றி நானாக
நடமாடும் நினைவுகள்...............

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி