
மண்மேடு எங்கும் கலவரம் தாங்கும்
மாறும் நிலை ஏனோ ? காருண்யம்
போற்றும் மானிடா,- குங்கும
சிரிப்பில் குருதிக் குளியளேன்?
மன்னவனாளும் குற்றம் எதுவோ..?
மக்களைத் தாக்கும் குண்டுகள் ஏனோ?
உயரே பறக்க சிறகுகள் உண்டோ..?!
சாதிய வெறியனே...
மனிதம் மனிதம் நிமித்தம் மரணம்
புகழ்க் கொண்டுக் கூடி நிற்பர்
மாளும் உடலில் பங்கெடுப்பாரோ
புதையாளும் சரீரமே.?
கலியுகம் : ஓட்டு வாங்குற எந்த கட்சியும் ஓட்டு போட்டவங்கள நினைக்கறதும் இல்லை ஓட்டு போட்டவங்க எல்லாம் கடமை முடிந்தது என்று நினைப்பவர்களும் இல்லை ... காசுக்காக போடுறமா கடமைக்காக போடுறமா யாருமே போடாம விட்டா என்ன நடக்கும் ஒவ்வொருத்தரும் நினைச்சு பார்த்தீங்கன்னா புரியும் ..............................
22 கருத்துகள்:
வந்தாச்சு...
நல்ல கவிதை.
தினேஷ் என்ன இது.. செம டெரரா இருக்கு...
கவிதை அருமை..
பஹ்ரைனில் நடப்பதை சொல்லி எழுதிய கவிதை ஒரு சாட்டை அடி அவர்களின் இந்த வெறிக்கு....
இதுல பாதிக்க படுறது நாமா அவனுகளா....
Nice Lyrics....
கலவரம் பூக்கும் மண்மேட்டில்
அமைதிப்பூ சிரிப்பது எந்நாளோ...
குங்கும சிவப்பு குருதித்துளிகளின்
சுகம் காண்பது நிறுத்தப்படுவது எந்நாளோ..
மனிதத்தை மறந்து விட்டு,
மரணத்தை நேசிக்கும் சாதி வெறியனே...
மறந்து விடாதே....
நீ வைத்திருப்பது
என்றோ ஒரு நாள் மண்ணுக்குள்
புதைந்து போகும் சரீரம் என்பதை...
இப்படிக்கு...
தினேஷின் கவிதைக்கு (சிரமப்பட்டு) விளக்கம்
எழுதி பேர் வாங்குவோர் சங்கம்.
அருமை நண்பரே.!!
சமீபகாலமாக மாறுபட்ட தினேஷை காண்கிறேன்..
அருமையாக அமைத்துள்ளீர்...
@பாரத்.. பாரதி: உங்கள் விளக்கத்தில் தினேஷின் கோபம் மறைகிறது.. மற்றும் அதன் வேகத்தை உடைத்து ரசனையில் எழுதியதுபோல் உள்ளது..
காருண்யம்
போற்றும் மானிடா,- குங்கும
சிரிப்பில் குருதிக் குளியளேன்?
....வேதனையான அவல நிலை.
புதிய சொற்கள்.. பழைய வேதனை.
.....புதையாளும் சரீரமே.... உண்மையான வரிகள் கொண்ட கவிதை...
அருமை நண்பரே!
வலியுடன் நீ.........குருதி எனும்....நீர் கண்ணோடு நான்!
>>>>கலியுகம் : ஓட்டு வாங்குற எந்த கட்சியும் ஓட்டு போட்டவங்கள நினைக்கறதும் இல்லை ஓட்டு போட்டவங்க எல்லாம் கடமை முடிந்தது என்று நினைப்பவர்களும் இல்லை ... காசுக்காக போடுறமா கடமைக்காக போடுறமா யாருமே போடாம விட்டா என்ன நடக்கும் ஒவ்வொருத்தரும் நினைச்சு பார்த்தீங்கன்னா புரியும் .....
என்ன தினேஷ் ரொம்ப கோபமா இருக்கீங்க போல
..
>>>
Blogger பாரத்... பாரதி... said...
இப்படிக்கு...
தினேஷின் கவிதைக்கு (சிரமப்பட்டு) விளக்கம்
எழுதி பேர் வாங்குவோர் சங்கம்.
வர வர பாரத் பாரதி லொள்ளு பண்ண ஆரம்பிச்சுட்டாரே...ஹா ஹா ரசிக்கற மாதிரி இருக்கு
//குங்கும சிரிப்பில் குருதிக் குளியளேன்?//
துயரங்கள் கண்முன் தெரிகிறது
மனிதம் மறந்த மனிதர்கள் நிறைந்துவிட்ட உலகமாச்சு தினேஸ் !
கவிதை அருமை..
//வர வர பாரத் பாரதி லொள்ளு பண்ண ஆரம்பிச்சுட்டாரே...ஹா ஹா ரசிக்கற மாதிரி இருக்கு//
தினேஷ் நம்ம சகோ தானுங்க... கோபிக்க மாட்டார்...
மனிதம் நிமித்தம் மரணம்.
எண்ணற்ற கேள்விகளைக் கிளப்பும் வரி
//குங்கும
சிரிப்பில் குருதிக் குளியளேன்?
/
அதுதான் ஏன்னு தெரியல .. ஓட்டுப் போடும்போது பார்த்து போடணும் ..
கருத்துரையிடுக