வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

ஆடி வெள்ளி ...!


ஆடி வெள்ளி அன்னை
அன்பை அள்ளித் தந்தாள்
நாடி வந்து மண்ணில்
நாளும் விந்தைச் செய்தாள்
ஆடும் தந்தை தன்னில்
ஆளப் பாகம் தந்தார்
தேட லுந்த உள்ளத்
தேரில் ஆடி வந்தாள் (அன்னை)
மாரி அம்மன் தாயே
மனமி ரங்கி வாநீ
நேரி லுன்னைக் காண
நிலவும் தர்மம் நீயே
வாரி அள்ளித் தாரும்
வசந்தம் எந்தன் தேவி
பாரில் வள்ளல் நீயே
பசிக்கும் உண்ண வாநீ
கூழும் அருந்த வாரும்
கும்பஞ் சோறூம் தாறோம்
ஏழை எதையும் பாறோம்
இன்னல் மட்டும் தீரும்
வாழ வழிகள் போதும்
வந்து உண்டால் போதும்
சோழ மன்னன் ஆண்ட
சொர்க்கம் எங்கள் பூமி

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

வருக வேல் முருகா...!


தனதன தான தனதன தான
.. தனதன தான .. தனதான
அகமன தாக அழகுரு மாயை
...அரிதென வாக ... அடையாரும்
...அலைகட லாக அதனுரு மேவி
...அலைவது லோக ... அடையாலம்
பகடைக ளாட வழிவுரு மாற
...பகைவனு மாள ... பலனாகும்
...பகலவ னாளு மயமுரு வாக
...படைகள மாக ... அருள்வாயே
சுகமன மேற அடர்வன மாயை
...சுருதியி லாட ... மயமானேன்
...தகுதியி லாது நிகழுவ யேது
...தரமது மாட ... மலராக
மகவென ஆன மழலையு மாகி
...மனமொடு ஆள ... பிறவாயே
...வருகவெ வாழ வழியது மாகி
...வளமொடு மாயை ... உடனால
-மோ.தினேஷ்குமார்-

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி