வெள்ளி, 22 மார்ச், 2013

இனியேனும்....? இனிமை தாரும்....!


 நான் வேண்டும் வரம் தா ... ! இறைவா... !
வரம் முழுமைப்பெற வாக்கினிலே நீவா...!
நாவினில் சூடிய... ! உன்னால் நரனாக
எட்டுதிக்கும் என்இனம் படும் பாட்டினில்....?
கேள்வித் தீ மூட்டி... ! கேளாயோ ... ! உந்தன் உள்ளில்
மாறாதே ... ! வடுவங்கு நினைமாற்றி நீட்சிக்கொள்ள
ஆத்திரம் கொண்டு உந்தன் நா ... ! விரட்டும் வரம்தா ...!
நாதனாய் மயங்கி ஆடவிடு...! ஆடவிடு ....!

நாளையை எண்ணி ... ! என்னில் கோர்த்துவிடு  ....


கூட்டினுளும்..! காட்டினுளும் ...! கூட்டமாய் வீரர் ..!
வதையில் விதையாகி...!  செந்தமிழெனும் தீச்சுடராய்...!
வீரம் துளிர்விட ....! துரோகத்தீ ... ! அருகாமல்
தூரத்தே தூற்றி ஆழ்த்தும்...!  பிறைசூடா ... ! 

இனியவனாய் இனியேனும் இன்னாரில் தர்மம் 
காக்கும் செந்தமிழர் குலம் செழிக்க ...! ஆதரவு தாரும்
இனமக்களுக்கு இனியேனும்....?  இனிமை தாரும்....!

புதன், 6 மார்ச், 2013

தமிழே ...! அடியவன் பாடிட அமுதென வாராய்...!

தமிழே ...! அடியவன் பாடிட அரியவன்
ஆடிட அழையாய் அணியே நதியாய்
புறல புயாலய் அகல திகழவனை
தீண்டிட வாராய் மெய்யமுதம் தாராய்.....
ஈடேது சொல்லேன் நவமணி நாயகன்
திருவடி போற்றி திகழும் மனமடையும்
ஆனந்த கூடெந்தன் கூரே குயவனின்
கூட்டிசைக்கு பாட்டிசைக்கும் பாரேன்....
காடு விடுமென்னை காணேன் கனவே
கரிய நிறமேறி மாளாய் மதம்கொண்டு
விண்ணெட்ட மண்தட்டும் வீனனிச்சிறி யோனின்
மதியெட்ட மாதவனே நீவா....
சிலிர்த்தெழ சீர்படை தீட்டி யுகம்ஒத்த
யோகநிலை வீரா மதியேந்த மாறா
மனமுவந்து வாராய் கெதிகிட்டா பாவியுந்தன்
பாதமதில் வீழ நிலையாழ்ந்து தீரும்....
ஊட்டிக் களிப்பாள் தவழுமெனை தேவி
சீராட்டி தாலாட்டி நல்வினைதனில் தேற்றியே
அள்ளிமுகர் வாள்அகம் கிள்ளி இழுக்கினை
களைவாள் இளமதியென் தாயே.........

சர்வேசா........!

அடி ! அம்மாடி நீயெந்தன் முன்னோடி 
நானிசைய நாவழையும் தாகம் தலையாட்டி
தேரடியை பாராய் பவமணியும் பாரம்
பராபரமே நாற்புரம் சூடா மலராய்

முழுமை அறியாமல் மூழ்கி தவிக்க
நிறையா மதியும்மதி ஆழும் மயக்கமதில்
மாயனெந் தன்மாயை ஆளும்மா றுதல்காணே
நேருடல் வேரிட ஆறுதல் ஆனேன்

மருவிமா யாவி குருவிகூடு தாவி
மகுடியிலி சைக்குதென் மாயை மறுபிடி
தாங்க மையலுன்னை மீட்டதா வணியில்
தலைமலர் பாவண்ணம் பாட

நானாடும் நாட்டிய மேடையுடன் தானாட
தள்ளாடும் தாளகெதி திண்டாடும் பாதமலர்
சொல்லாடும் சிங்கார பாலமுத பாவை
பரியமர சாலையுந்தன் சாரமே சர்வேசா........!

திங்கள், 4 மார்ச், 2013

காதல்(லை) படுத்தும் பாடு.....!



கசக்கி பிழிந்தென்னை காக்கும் கவியமுதே
காதல் விதைத்து உருகும் மணியமுதே
மாரிம ழைக்கொதுங்க இரையும் இசையமுதே
ஈடென்ன கேளேன் இனிது

 
மனங்கட்டி நாபேச தூதுபோ சொல்லுங்
கிளியே சிலையெட்டும் காரியமே மெல்லுங்
குயிலே மணமல்லி மாலையிட வெல்லுங்
கலையே கனவனைத்தும் கூட்டி


மயங்குது மல்லி மனமது தள்ளி
இயங்குது சொல்லி - மனமள்ளிஎ டுத்தானே
கள்ளி திகைத்தாளே எண்ணி நகையும்
சுவையான காதல் சுகப்பட


சந்திர மோகத்துள் மந்திர மாள்வது
தந்திர சேதிகன் சுந்தரமா வதும்நா
சிந்துமது சொந்தமணி வேடம் தனியா
இவைக்கு இரவது ஈவு


ஏழெட்டு கனியாக் காதலினை பார்த்ததுண்டு
ஏழைக்குள் ஏனிங்கு காதல்வித்து சாதலின்
ஆளுமை ஏற்றிவந்து நேசத்தின் பூட்டுக்கள்
தானவிழ்த்து தாலாத பட்டிக்குள் ஆடியடக்க
ம்
 

சனி, 2 மார்ச், 2013

ஞானத்தை தேடி நலவானே நானும்....!

ஞானத்தை தேடி நலவானே நானும்
மானத்தை வேதம் சுடுமது பாரீர்
மனவத கானம் மலிவது சூடும்
மனமிகும் தானம் ஆகு.........


 யதார்த்தமாய் என்னை தேடிய பாதையில்
கொட்டிய குவியலாய் முத்துக்கள் மூலையில்
மூலனே முடிவிலா எண்ணத்துள் சிக்க
தினமங்கே ஓர்பார்வை பாவையாய்..........


கார்பெருங் கொண்டல் கயவனும் உய்ய
உதயனைம றைத்துமாரி ஊற்றாகி நேற்று
உபயம்செய தேக்கிடம டைத்தான் உரியனாகி
பார்க்கடல்ப டுத்தானை போற்றிட தூற்றான்........

  
பிறப்பினி ஏதோ மறவா இறப்பினி
மெய்க்கு உழப்பனி செய்திடு மறப்பணி
வேணோ இருப்பினி இந்தும் சகலமும்
சார்ந்துயர்த்த அகலும் கோணல்......


ஆற்றிலிடு வான்தேற் றிஅணைவான் போற்றி
உடையாள் தீட்டிய நாட்டிய மேடை
தடையேன் தவழ்ந்து தரணி யிலுருவாய்
தாளமி சைக்க அசைந்துயர்ந்து வாநீ........

 

வெள்ளி, 1 மார்ச், 2013

அருந்தவம் செய்யினும் காணா...!


சித்தனாகி போயின் புலப்படும் வெற்று
பிதற்றங்கு பித்தனாகி நானே பிழையேன்
முழுதுமெனை குற்றமாக்கி தீண்டா சாரமதை
சுத்தமாக்கி தாயென நில்லும் உலகு


மாதவம் சூடிநின்னை காண முதலென்ன
தாராய் பிறைமதி சூடா மனதினில்
வாடா மலராய் துளிரும் அனைப்பு
அருந்தவம் செய்யினும் காணா...............


நாறமலர் தேடினின்னை சூட்டுவிக்க வந்தவிழும்
சொந்தமதி முந்துமிடம் சிந்து நடனமாட
கார்வலுவன் நேரெதிரே கண்ணமிடை சிந்துமிதழ்
தேனமுத வண்ணக்கோலம் பாட.......
 


மெய்யுருகும் மேட்டில் கல்லுருகா காட்டில்
கரிய நிறவேடா கர்மமெதிர் தீர்க்கும்
கடுந்தவனே கூடும் கருணை வழித்தேராய்
கண்ணதிர கூறும் கடமையுந்தன் பாடே............


கொண்டனவே அஞ்சும் அகழியில் கொஞ்சி
விளையாடிடும் தங்கமுந்தன் சேயாம் சகடும்
அகன்றிட ஆற்றிடை நாதிகன் தேற்றிடும்
கூடு குவியலாய் மாயமெய் தானே............


பட்டத்து யானையும் கொட்டத்தில் கூடுமோ
சட்டத்து சாட்டையும் விட்டத்தில் தூங்குமோ
இட்டத்தென் தூவள் இயக்க மதிமாறியே
சுட்டதன் சூடு பிடித்தான் முடிவு..............


  

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி