செவ்வாய், 26 ஜூன், 2018

நாகரென வானு யர்ந்த ஆதி மகனான



போனவழி யேறு மிந்த நாளை நலமாக வந்து
ஆறுமென வேநி னைந்த மனதாலும்
போகுமென வேநி ரைந்த மேனி யதுமாக முந்தி
ஏறுமுக மேஅ ரங்கம் உடனாளும்

ஞானவடி வாகு மந்த ஞாய மலராகி நின்ற
நாதமுட னேஇ சைந்த மதியாலும்

நாகரென வானு யர்ந்த ஆதி மகனான எந்தன்
ஆறுமுக னேமொ ழிந்த தமிழாகி

கோணமழி யாத விந்தை யாகு மதியேவி ளைந்து
தேடுமொரு நாளும் மின்ன திரிவேனே

கோளமயி லேறி வந்து ஆடு மழகாக மந்தை
மானுமத னோடு யெங்கும் அறிவாயோ

தானமழி யாது யர்ந்து மீத மெனுமாய மன்று
வேடமணி யேன லைந்து புதிதாக

தானுமழை யாத யர்ந்து வாழ வழிதேடு மெங்கள்
வேதமுறை யாகி நந்தன் பகவானே

கருத்துகள் இல்லை:

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி