ஆழ்ந்த உறக்கம் இரவின் உச்சத்திலே
மெல்ல மெல்லிய கரம் பிடித்து
என்னை அவளருகே அழைத்து செல்ல
உள்ளில் உணரா தவிப்பு
மழலையாய் கூடே ஒன்றும் புரியாமல்
பற்றிய கரத்தின் பிடியில் பயணிக்க
சொல்லாமல் உணர்த்தி என்னை விட்டு
செல்ல பிரமிப்பின் உச்சத்திலே
உனக்காக காத்திருக்கோம் வா வா
எங்கள் கண்ணே உயிரில் கலந்து
உள்ளில் உணர்வாய் என்னில் உணர்த்தி
உருவளர்க்கும் செல்லமே ......
நீ வருவாய் என விழித்திருக்கும்
இரு விழிகளின் தாண்டவ தகிப்பு
நீளும் பாதைகளில் இனி மூவராய்
பயணத்தை துவக்க வாராய் ....
எங்கள் செல்வமே நீ வாராய்....!
.jpg)









