வியாழன், 19 ஆகஸ்ட், 2010

கனா கண்டேன்

கனவொன்று கண்டேன்
நேற்று நள்ளிரவில்
உன் முகம் காண
ஆவலாய் விழிதனில்
வலைவீசினேன்
நின் தந்தையின்
முறுக்கு மீசை - மட்டும்
காட்சிக்கு இரையானது
ஏன் கனவிலும்
நின் முகம்கான
கடுந்தவம் மேற்கொள்ள
வேண்டுமோ நான்?
சொல்லடி என்
பச்சை பசுங்கிளியே............
நின் முகம்
காணும் நாட்களை
தினம் தினம்
வெறுமை கலந்த
தனிமையில்
நின் அன்பிற்காக
ஏங்கி அலைகழிகிறேன்
எனை அரவணைப்பாய்
என்று காலத்தை
கடந்து செல்கிறேன்
நின் வருகையை
நேர்கொண்டு..........

புதன், 18 ஆகஸ்ட், 2010

பட்டு புரிந்தவை

சட்டம் பயின்றவன்
சாஸ்தாங்கமாக
உறங்குகிறான்
சிக்கி தவித்தவன்
சீர்கெட்டு அழிகிறான்
சுற்றி திரிந்தவன்
சூழ்நிலை யறிவானோ
செத்து பிழைத்தவன்
சேர்வானோ யவனோடும்
சொந்தம் பிரிந்தாலும்
சோர்வின்றி வாழ்வில்லை
யவர்க்கும்...............

பசி

பாத்திரங்கள்
பசிதாங்காமல்
உருண்டு
மருண்டு சுருள்கின்றன
இன்னும்
பலர் வீட்டு
சமயலைறைகளில்..........

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

நண்பரின் வேண்டுகோள்

வணக்கம் நண்பர்களே
ஹரீஷ் அவருடைய அறிவுரைப்படி
மகாகவி பாரதியார் பாடல் ஒன்றை என்
சிந்தனைப்படி குறும் பாடலாக எழுதிவுள்ளேன்
தவறு இருந்தால் இம்மகா பாவியை மன்னித்தருள
வேண்டும்

கண்டதும் உனை நான் எழுதுகோல்லானேன்
கண்கள் லுதிர்திடும் காவியம் படைத்தேன்
காகித ஓடையில் கண்ணீர் வடித்து
வேள்விகள் தோற்துவரும் வினாவானேன்............

சுமைதாங்கி

ஆயிரம் இரவுகள்
அதிலோர் கனவு
கண்மணி நின்றால்
கார்மேக கூந்தல்
மயக்கும் மல்லிகை
மலர்ந்த முகம்
காந்த கண்கள்
கண்டிராத அழகு
அழைத்தது இளமை
வாழவைத்தது ஆண்கள்
வாழ்விழந்த நிலையில்
தினம் தினம்
இரவுகள் சுமக்கும்
இன்பம் பொங்கும்
இளமை விருந்து
பணமழை பொழியும்
பருவமது.........
பருவம் முதிரும்முன்
உயிர் குடிக்கும்
நோயொன்று.............
அவள் உடல் குடித்து
உயிர் குடித்தது...............

மலர்மாலை எதற்கு

மலர்மாலை கொடுத்த
ஆடவன் மறைந்தான்
அருகாமையில் உள்ள
ஆடவன் புதிது
அழைக்க துடிக்கும்
கண்கள்............
அணைக்க துடிக்கும்
இளமை............
அதனை ஏற்க்க
மறுத்த மனது
மல்லிகை தோட்டம்
மலர் கோடி கொடுக்க
மலர் தொடுத்த கரங்கள்
மலர் சூட மறுக்க
இந்த மங்கையின்
சடலத்தில்............
மலர்மாலை எதற்கு........

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

முயற்சி

மூன்று வரியென்று யோசிக்க வேண்டாம்
முயற்சிசெய்.............

உன் முடிவுவரை
முயற்சி செய்
என்னால் முடியும் என்று .............
நீரும் நெருப்பாகும்
முள்ளும் மலராகும்
உன் நெஞ்சின்
வலிமைகண்டு............

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி