வியாழன், 27 பிப்ரவரி, 2014


கண்டதுரு காணும் கனியிருப்ப நீயே
விண்டதொரு கூறும் கருவிப்ப நீயே 
கொண்டதுரு காண கருவிழி நீயே
மாண்டதுரு மீண்டு மலருவ நீயே

எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய ஓம்...

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

பொய்யுரை பெய்யுமின் தேக்கமே...!


என்னை கொலைசெய்ய கோடிக்கூர் ஆயுதம்
தேவை எண்ணச் சிலாம்புகள் வர்ணமாய்
கர்ணக் கனவினில் தாக்க புலரும்மெய்
பொய்யுரை பெய்யுமின் தேக்கமே....

மருந்தும் அருந்தும் மருக்கொழுந்தா உற்றதன்
சாயல் உணர்வதன் காயம் விழுப்புண்
தகிக்க விடியலின் தாகம் விருப்பதன்
தோற்றம் விளைவதைப் போற்றும் புகட்டு...

வடிவழகு நாடும் நிலையழகு சூடும் 
மதியழகு மாறும் மனமழகு சாரும்
தினமழகு கூட்டும் குணமழகு தேட
அதனிருள் நீங்கும் நலமே...

நீரோடும் பாதை வகுத்தவர் யாரறியே
நானோடும் பாதை வகுத்த வழியென
போராடும் பொய்க்களம் தானிது தந்திர
எந்திரம் போர்த்திய அந்தரம் ...

நானென்ற நான் தன்னை குறிக்க
நனவென்ற நான் உண்மை உதிர்க்க
நயமென்ற நாண் உள்ளில் புகுத்த
நரனெண்ணும் நான் காணுவேன் நானில்...

”கா”ரியம் ”த”டைபடும் மோத”ல்”



காற்றாய் கனலாய் நினைவில் 
ஊசலாடி நித்தம் என்னைச் சுற்ற
கர்ப்ப கிரகமா நான் ? அலைகள் 
ஓயாது புரண்டு புரண்டு மேலெழ

சொல்ல நினைப்பதும் ஏதோ தடுப்பதும்
மெல்ல வழியைத் துழாவும் செல்லென
சொல்லா செவிபடிய தாழா உழவும்
மனமது கோட்டையே உள்ளது

செய்வத றியாது பிதற்றும் சித்தம்
மெய் தவரும் மொத்தம் மூழ்கிய
பொய் யென மெய்யாய் பொழியும்
புரட்சித் தலையாடும் கோர்வை

தேடிப் போவதென் போக்கு எனினாலும்
கூடிப் பிழைக்க குடியவனை நாடி
வருவாளே நாணமுடன் உன்னவள் தேடல்
நிலைக்க உளத்தையேச் சூடு

கர்ப்பகிரகம் தானடா நீயும் உள்ளவனை
அமர்த்தியா ளுங்கொடை கொண்டான் யுவன்
அத்தகைய சுத்தச் சுகந்தம் அடையும்
பேராணந்த பேருவ மெய்யருள் பொய்யே....

செவ்வாய், 31 டிசம்பர், 2013

வாழ்த்தி வணங்கும் பொழுது...!


என்னெண்ணம் வர்ணம் குழைத்து எழுதி
நிறப்ப வழிதனை வாழ்த்தி வணங்கும்
பொழுதினைப் போல் வந்துபோகும் யாவும்
பதறாது ஏற்றுக்கொள் வாழ்வு சிறக்கும் ...

வயகாட்டு வேலியெல்லாம் ஆளும் பயங்காட்டும்
வாக்கபட்ட சோலையெல்லாம் வாழ்த்தும் - ஆசை
வழிகாட்ட வாழ்க்கை நெறியுணர்த்தும் தோரணம்
வறுமை நிறங்காட்டும் ஆறறிவர்...

மேய்த்து பார்த்தான் மேய்ப்பன் மெய்யை
மெய்யாய் பொய்யின் புன்னிய அலங்காரம்
புலப்பட பெருந்தியாகம் போர்த்தி பெருகிடும்
தீயுள் வேள்விதனை வார்த்தான் ...

உள்ளவனைக் காண்பதும் உள்ளிலா தவனை 
காண்பதும் நேர்படும் நிலைக்கேற்ப வேறுபட
தன்னிலை கோர்க்கும் அருந்தேன் மருந்தாய்
வருந்தும் வதன மாற்றமே யுனைசாரும்...

கரையா மனதே கரையும் தொடத்தொட
நீளும் தொடராய் படரும் முல்லைக்கு
பாக்யம் சரமேறி கார்குழல் கூட்டில்
குடியாவ தன்று ஒருநாளே...

திங்கள், 30 டிசம்பர், 2013

புதிராகும் பூக்கள்...!


ஆண்டு கடந்ததோ ஆண்டவன் பாக்யவான்
மாண்டு கடந்ததோர் கூட்டமே மக்களெனும்
பக்குவம் யாரறிவர் குட்டகுட்ட குனிந்தே
பிறக்கிறது ஏழ்மை விடியல்...

ஆறடி தானெங்கும் மெய்யே அறியாது
ஆள்வது பொய்யே புரியாத பூவுக்குள்
பூகம்பம் உண்டே உணரா ஊழ்வினை
தாக்குவ தர்மமென நில்லும் நிழல்...

உதிப்பது உனக்கென புலம்பாது ஆர்பரிக்க
விதிபதப் பயனது பிதற்றாது அர்பனிக்க
மதிசுடும் கனமது அதர்ம விற்பதம்
கதிதொடும் கரணமே தருணம்...

வாக்கபட்டு சீர்அமைய நாமதிக்கும் வாக்கிய
வார்த்தைகட்டு உள்ளின் உடையென ஈர்க்கும்
வழிதனில் வார்ப்புகள் வெட்டவெட்ட கோர்வை
கிளையாகும் ஞானக் கலையாதல் அழகு...

ஆடுவ தாடும் படியாடும் கூடும்
குடியாடும் பாடும் படியும் யாதும்
குறையா வதுமேது தீதும் நிறை
காண்ப தரிதென தீரும்...

செவ்வாய், 19 நவம்பர், 2013

வேடம் இனி எனக்கெதற்க்கு ,,,,


 
கட்டி வைத்த கூட்டுக்குள்ளே
கட்டவிழ்த்து பறந்ததடி நித்தம்
பொங்கும் பானைப் போலே
நினைவில் அலைகள் கூடுதடி
சத்தம் போடா யுத்தம் ஒன்று
அந்தி சாய வந்தமரும்
பக்குவமாய் வாக்குப்பட
வாத்தியக் கட்டு வேண்டாமடி
கூட்டுக்குள்ளே குருவிச் சத்தம்
குறுகுறுக்க செய்யுதடி வேடம்
இனி எனக்கெதற்க்கு வேர்வை
தங்கும் மேனியடி கானி நிலம்
காணும் கனா களையாது
காத்திருக்கு கானகத்தே
கரைத்தட்டி பாட்டன் சொத்து
பகிர்ந்த தற்க்கு வீட்டு முக்கில்
விரிசலடி சோறு திண்ணு
நாளாச்சு சோலைகுயிலே
நீ ஓடி வா அருகே....

திங்கள், 14 அக்டோபர், 2013

அதிகார அத்தியாயம் இன்றே பிறக்கட்டும் .....!


அற்றதிரு என்னில் அடைக்கலம் ஆகிநிற்க்கும்
உற்றதிரு உன்னில் அடக்கிடல் ஆகுமாயின்
வெற்றுத் திருவுடலின் வற்றல் தகுமாயின்
தாகம் புகும் தரணியையார் ஆள்வது

பற்றதிரு தீமூட்டி மற்ற தறும்மகிழ
நெற்றிதிரு செங்கமழ் நீர்தொட்டு எனை
அற்றதிரு ஆடவனாய் விற்றடக்கி வீருகொள்
கொற்றவளே கோலமிடு கோர்வையாய்

கோவை கடந்தறிய கொய்யா சுவையறிய
பாவை படர்ந்தொளிர பாமரனாய் பவ்யமாய்
பார்கடலான் பார்வையுனை ஆட்கொள்ள ஆகும்
அதிகார அத்தியாயம் இன்றே பிறக்கட்டும் .....

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி