சனி, 26 ஜனவரி, 2013
வெள்ளி, 14 டிசம்பர், 2012
பொருத்தமிலா திருத்தம்....?
அகில மளந்து அடைக்களம் சுட்டி
விளங்கிட தானே வியூகம் கொடுத்தான்
மலர்ந்திட மாலை தொடுக்கும் தனியே
மணந்திடும் தோகை மயில்
அகில மடங்கி துகளுமாகித் தீரா
சகலமு மாயையின் கூரே நிழலும்
பகுதியைக் கண்டவன் கொண்டதிது கூறும்
மிகுதியில் வீழா காண் ........
மலரொன்று மனம்கொண்டு தினம் உன்னை
தரிசிக்க விடைசொல்ல விளைவோடு விதியே
பயணிக்க சரமொன்றில் வரமேந்தி நகையா
தணியும் கனிவாய் உனது
மனமறியா மணக்கும் மாரணம் துணையேறி
துகிலுடுத்த தகிக்கும் மதியனோ ஆழ்ந்து
அமைதியாய் முடங்க கதியேற்ற மடங்கிய
சூழலின் விதிப்படி வழி
குருதி சிரிக்குதடி இந்த கூறுக்கெட்ட
மாக்களை நினைத்து சிதறும் கோரத்திலும்
செந்நிறமே எங்கிலும் படர்நிறம் பார்த்து
சாதியறிந்து கூறேன் நா...........
கோண வடிவிலான் கோர முகத்தான்
கோடி கொடுத்தே கோவில் அமைத்தான்
கோளத்தில் நாளும் கணித்தான் கோர்வையாய்
கொல்லத் துணித்தான் மாயை.....
வியாழன், 22 நவம்பர், 2012
விடியல் விளையேன் ......!
விழியே வழியே விடியல் விளையேன்
விதையாய் மடியேன் விழுதாய் மறந்தே
மதியே மலர்வாய் விதியணிச் சூதனமே
சொற்படியாய் மாறும் உனது
சுரமாய் அருள்வாய் வரமே யாவர்க்கும்
மனமே மகிழு சுடர்விடும் மருந்தாய்
இயலு மினிதே இணைத்திடு உயர்வாய்
அழைத்திடும் ஆணவ மடங்கும்
எதிரும் புரியா ததிரும் நிலையே
நிகழால் வகுத்திட நிழலும் நிறையாய்
சூடும் பிறைமதி மறையா திருக்கும்
கவனித்தாளு மனமே உலகு
நிகழால் வகுத்திட நிழலும் நிறையாய்
சூடும் பிறைமதி மறையா திருக்கும்
கவனித்தாளு மனமே உலகு
சகலமும் சமமானதோ சகதியில் புழுவானதும்
மனமது தூவளிலே தினமேந்தும் தாகத்திலோ
அலைமகள் தரைத்தட்ட தொடுவானம் மழைக்கொட்ட
மனமெல்லம் சினம்நீங்கி சுவையானதே.......
அலைமகள் தரைத்தட்ட தொடுவானம் மழைக்கொட்ட
மனமெல்லம் சினம்நீங்கி சுவையானதே.......
புதன், 3 அக்டோபர், 2012
தனியே தகிக்கும் தணல் ......!
அன்றள்ளும் மலர்போல நின்றெங்கும் வாழி
இளவட்ட முகம்கொண்ட இன்னோர்க்கு தாயே
நிறங்கண்டு நிலைப்பாடா நியதியை கூறும்
நிகரென்றும் பாராமல் கொடும்.......!
இளவட்ட முகம்கொண்ட இன்னோர்க்கு தாயே
நிறங்கண்டு நிலைப்பாடா நியதியை கூறும்
நிகரென்றும் பாராமல் கொடும்.......!
கடனூர் கொடும்பாவை தடகளனூர் தவசி
கண்டனூர் கொண்ட திங்கள நாதன்
செல்லுமிடம் மெல்லும் யாவும் நிலைக்கடல்
தாண்டியத் தெப்பத்துள் அடகு.........!
கண்டனூர் கொண்ட திங்கள நாதன்
செல்லுமிடம் மெல்லும் யாவும் நிலைக்கடல்
தாண்டியத் தெப்பத்துள் அடகு.........!
வீற்றுமிட மளித்தான் யாற்றும் பணிகள்
யாவுமென் கதியே நாவுமென் சதியே
கனவிடும் காரியன் நிகழ்விட தாரிகன்
புகலிட மேவியன் தாழ்......!
யாவுமென் கதியே நாவுமென் சதியே
கனவிடும் காரியன் நிகழ்விட தாரிகன்
புகலிட மேவியன் தாழ்......!
முடிவுடை வடிவுடையா விடிவுடையே
தடைவிதித் தஞ்சம்புகா எஞ்சுவ தஞ்சும்
நாளையரின் வாகைப்பாடும் தாகமே
தனியே தகிக்கும் தணல் ......!
தடைவிதித் தஞ்சம்புகா எஞ்சுவ தஞ்சும்
நாளையரின் வாகைப்பாடும் தாகமே
தனியே தகிக்கும் தணல் ......!
ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012
கற்பதம் ........!
நீரில் நிறமற்று யாதும் நினைப்பாட
நீதானோ கள்ளிக் கனவானே எந்தன்
நினைவா ளுமினி நிசம்
விடமா றிடையே றியதா இளகும்
மனமே சகலமும் நாளேந்தும் சூதனம்
மாறிய கார்ய விருட்ச மகிழும்
சடமே நிலையா நீ
நெஞ்சம் கனத்தெழ வஞ்சம் நகைத்து
வாகை சூடிட வல்லவன் தேகத்தில்
நஞ்சுருக்கும் வேடதாரி தேரினில் பாவை
மயிலும் படியளந் தானே
வாகை சூடிட வல்லவன் தேகத்தில்
நஞ்சுருக்கும் வேடதாரி தேரினில் பாவை
மயிலும் படியளந் தானே
நீர்பதம் சேருமிட நாற்றமிகை யாற்றும்
விருபதம் தாருமிட தோற்றமிகை யாற்றும்
துருபதம் வீழுமிட மாற்றமிகை யாற்றும்
கற்பதம் யாற்றும் உலகு
விருபதம் தாருமிட தோற்றமிகை யாற்றும்
துருபதம் வீழுமிட மாற்றமிகை யாற்றும்
கற்பதம் யாற்றும் உலகு
புதன், 11 ஜூலை, 2012
விடிவா...? முடிவா...?
விடிக இருளே விடிவா முடிவா
இளகிடச் சொல்லிடு வல்லவன் தேரினில்
சார்வ தாள்வதும் சாரத்தி லாழ்வதும்
கூடில்லா சூழும் சுமை..
இளகிடச் சொல்லிடு வல்லவன் தேரினில்
சார்வ தாள்வதும் சாரத்தி லாழ்வதும்
கூடில்லா சூழும் சுமை..
இனமெனும் சூழலி னாட்சி கரையறுக்க
ஈரத் துளிகள் இமையோடு வாட
உணர்வ தறியா கனல்....
கபடநாடி காலத்தே காணு மியந்திரச்
சங்கத் திலாடு மகமே யுணர்வாய்
கனவிடிய காலைக் கதிரு மெதிரே
தருண முதிர்க்கும் மலர்....
சங்கத் திலாடு மகமே யுணர்வாய்
கனவிடிய காலைக் கதிரு மெதிரே
தருண முதிர்க்கும் மலர்....
முற்று வதறிந்தே கற்றெதிர் தீண்டும்
சுடுங்காற் றினிலாட விட்டாய் இயலா
இனமானேன் தள்ளாடி தப்பிப் பிழைக்க
தானே மருந்தா னேன் ..
சுடுங்காற் றினிலாட விட்டாய் இயலா
இனமானேன் தள்ளாடி தப்பிப் பிழைக்க
தானே மருந்தா னேன் ..
வெள்ளி, 15 ஜூன், 2012
ஆள்வதறியேன்.........?
நாறுமது சாரமெண்ணிய வாரமுதிர்த் தாகம்
நலமதிர நஞ்சிலே காலமங்கிய தேகம்
மிஞ்சியத் தாளமிசைக்க நாளுவதங்கே
மிஞ்சியத் தாளமிசைக்க நாளுவதங்கே
கெடுவங்காட் டினிலாடிய சடமே
படியளந்தான் பரியமர்ந்தே பழியாவும் பாடித்
தனிலமர்த்த பயமேந்து மனதறியா தூவலெங்கும்
அகங்காட்டும் அழகாட்டு சித்தமென சுத்தமென்
சன்னதியி லாடும் மயிலே
சல்லடைத் தப்பியே தரலோகம் தஞ்சம்புக
தள்ளாடி தயைநாடி பொல்லாத போக்கனுக்குள்
சென்றாடும் சங்கமலர் வந்தனம் சிந்திய
கலஞ்சிய மாள்வத றியேன்................!
படியளந்தான் பரியமர்ந்தே பழியாவும் பாடித்
தனிலமர்த்த பயமேந்து மனதறியா தூவலெங்கும்
அகங்காட்டும் அழகாட்டு சித்தமென சுத்தமென்
சன்னதியி லாடும் மயிலே
சல்லடைத் தப்பியே தரலோகம் தஞ்சம்புக
தள்ளாடி தயைநாடி பொல்லாத போக்கனுக்குள்
சென்றாடும் சங்கமலர் வந்தனம் சிந்திய
கலஞ்சிய மாள்வத றியேன்................!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது
.jpg)
.jpg)

.jpg)