ஞாயிறு, 20 நவம்பர், 2011

இனிக்கும் நாளென்று...?

அறியாதிருப்ப காரியக் குறையோ
தாயுண்டு தனயனுண்ண மீளுண்ட 
யான் விளைக்க பிழையறிவோர்
பெரியோர் வினை தொடுக்க

உள்ளமர்ந்து பிழையகற்றி அருள்வோனே
திகழுதம் மேனி இகழுதம் உலகே
மகிழுந்தமிழ் இன்னோர் நாவினில்
இனிக்கும் நாளென்று...?

புகுந்தோன் வளம்வர கிடந்தோன் 
மறந்தழ மாறுதென் மாடம் வாசம்
வீச வாசல் வந்தோனைத் தேடும்
பனியமர்ந்து நாடும் 

நல்லோனின் நலமறிய நரனாய்
நாவிரித்த வலையில் நகலும்
அகலும் அறிந்துழா ஆளுஞ்சுனை
நிறைந்திறக்க காணீர்.....

வியாழன், 10 நவம்பர், 2011

தவறென்ன யான் செய்தேன்....?

இமைக் கூடி இயல் தாண்டி 
இணைத் தாவி இதழ்ச் சூடி
இடைச் சாடிய கரந்தழுவ 
மறந்தென்னில் மலர

உனக்குள்ளே உயிர்ப்பித்து 
உருக்கொண்டேன் உடனழிக்க 
தவறென்ன யான் செய்தேன்
உடையவளேக் கூறு

இணங்கி இடமளிக்க நாழிகையும்
இதமளிக்க இன்பத்தின் உச்சத்திலே
உலவுகின்ற நிலவும் உடனிருக்கும் 
கனவுல கல்லவே காட்சி

சாட்சி சொல்வோன் நானென்றே
மனம் சலசலக்க வினவா விளைவித்து 
விளையாட்டாய் காரணித்து வினைத்து 
விடை யளித்ததேனோ..?

திங்கள், 7 நவம்பர், 2011

இணையத்தின் ஓட்டம்....!

தனிமையின் தாகந் தீர்க்கவல்ல
சுவைமிகு மருந்தே பதிவுலகச் சுடரே
தாகம் தனிந்தே வெறுமையின் ஏக்கங்கள்
மறைந்தென்னில் மலரும்


அன்புக் கரங்களின் அரவனைப்பில் அகிலமும்
வளம்வர அரங்கத்தே காணா அவதறிப்பு
அனுதினம் அலைகடலாய் அன்பின் 
ஆர்ப்பரிப்பு என்றும் மாறா


கலங்குவதேன் கண்மணியே காரணத்தே
காலமிகுதியில் சேர்வனச் சீரும் சிறப்பே
நலமிதோ நவிலும் நாவண்ணம் கூற 
குரலினும் அறியாக் குழந்தாய் 
  
மலரினில் தேடும் கலனிலா சூடும்
பகலவன் சாடும் இரவணிக் கூடு 
இமைகளின் நாட்டம் இருதயக் கூட்டம் 
இணையத்தின் ஓட்டம் இனிது 


வெள்ளி, 14 அக்டோபர், 2011

வாழ்த்தி வழி கூறுங்கள் ...!


நினைவுகள் நீந்தி செல்கின்றன கடந்த
காலங்களை நோக்கி வழியெல்லாம்
நில்லாச் சுடராய் தாய்மடி தவழ்ந்து 
தந்தைக் கரம் பற்றிய மழலையாய்   

ஆட்டுவித்தோர் காட்டுவித்த பாதைகளில் 
பயணிக்க கொடுத்தோர் கிடைப்பினில்
நெடுந்தொலைவு கடந்தும் நீளும்
பாதைகள் முற்றமிலா 

கரை யேறுகனம் நழுவ முகமறியா
எனைத் தழுவும் காட்சிகளின் ஆட்சிதனில் 
நிறைந்தோனைத் தொழுது இடைநாளின் 
கடைப்படி மறையுந் தருணம் 

அன்புள்ளங்கள் எம்மைச் சூழ்ந்து வர 
மேற்ப்படியறிய தொடரும் பயணத் துவத்தில்
சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் இச்சிறியவனை
வாழ்த்தி வழி கூறுங்கள் 

திங்கள், 3 அக்டோபர், 2011

"பிறவித் தேடல்"


காலை கனியும் அந்திமக் கதிரில்
மலர்சூடும் மாலை மஞ்சள் வெயில்
வழித்தேடும் விழிதனில் வினவா அழைப்பு
விடையில்லா பிரிவா புரியும்...?

இரவின் உறக்கம் இமைகளோ மறுக்கும்
கனவினில் பறக்கும் மனமெல்லாம் இனிக்கும்
தண்ணீர் தகிக்கும் அடுப்பனல் குளிரும்
தீஞ்சுடர் தாங்கும் கரங்கள்...!

உள்ளில் பிறக்கும் உணர்வில்லா வலிக்கும்
உண்மை புரியா பிரியம் ஈர்க்கும்
பெற்றவர் எதிர்க்க அம்புகள் படரும்
அன்பினில் உணராச் சுருக்கு.

இருமனச் சங்கமம் இறைதனில் வகுத்தது
பிழைதனில் பயணம் ஏன்? பிறவா
பிறவியும் அடங்கும் பயனில்லா பாதைதனில்
ஏற்றாச் சுடரினில் தொடரும் தேடல்.


கலியுகம்: - சமயங்கள் வேலை நேரங்களில் கழிவதால் அன்பர்களுக்காக ஒரு மீள் 

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

மலரிதழ் மனம் எங்கே ...?

நரனின் பாதகை நவிலும் நடை
நாடகந் தாவிய நாரணன் மாயையோ
நின்நிலை நிகழ்வனச் சாடும்
நீதியின் முகம் காணேன்

தகனமிலா தன்னுடல் தாவும்
தானுமிலா தாகம் தயை புரிய
தினமிலா திகைப்பு திரிக்கொண்டெரிய
தீச்சூடி தீயன அழியுமோ

மலரிதழ் மனமெங்கும் மழலையே
மானுடம் வேடமே...! மணந்தெங்கும்
மிகையிலா பகையாள மாண்டன
மீள விலைக் கூறும்.... 

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

கீரிய காரிய மறியேன் ....!

சத்திரமோ சிறகணிச் சித்திரமோ
சாந்தமணி சன்னதியில் நாதனின்
சிந்தனைச் சிந்திய காவியமோ கல்லொன்றில்
சீவிய சிற்பமணிக் கூடோ

கருவிழி தொடர நிறந்தனில் விருட்சம்
கானக சுடராய் நாற்ற மத்தியில்
கிருதய பயனாய் நடந்தொரு கூடாய்
கீரிய காரிய மறியேன்



நதியாய் நாணலாய் விண் மதியாய் 
நாளுயர நாவறண்ட நரனாகி
நிறைத் தவழ நினைத் தொழும்
நீரண்ட நீதியின் வடு ......

கவரும் கலையின் கருவே கனலாய்
கானலின் காதலாய் காவலின் காகிதமே
கிளையின் கிடப்பினில் கிளியாய் கிறங்க
கீழலைக் கீதம் மறவே....



அங்கிலா எண்ணம் உடைத்து கண்ணிலா
காரியக் குடுவை மாறிய மடையுடைய
தேடியவன் சாடி வருவ சூடு
மலரிடத்து மனம் தவழும்Edit

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி