ஞாயிறு, 28 நவம்பர், 2010

தந்தை மனம்..........



பொன் நகைத்தது
பெண் நகைத்ததால் - இரவு
விண் வியக்கும் வீதியுலா
விடியற்பொழுதோ நின்
மணவிழா......

கண்ணாளன் கைப்பிடித்து
கரையேற துடங்கும் விழா
என் நினைவு வேண்டாம்
இனி உனக்கு......

கருவேலம் முள்ளிருக்கும்
காட்டு வழியல்ல - நின்
கைபிடித்தவன் காட்டும் வழி
பாதையில் முள்ளிருக்குமாயின்

வழியில் தைத்த முள்
நினை வழிமறிக்க போவதில்லை
முள்ளிற் பாதம் பட்டாலும்
சொல்லிற்க் காளாகாதே.....

பாதையை சீர்ப்படுத்தி - நின்
துணையின் கரம்பிடித்து
தொலை தூரம் பயணிக்க
என் அன்பு மகளே.........

டிஸ்கி 1 : சமயம் இல்லாத காரணத்தால் மீண்டும் ஒரு மீள்பதிவு நண்பர்களே

டிஸ்கி 2 : ஒரு தந்தையின் ஏக்கங்களை சந்தித்தேன் அவர் மனநிலையில் இருந்து நான் எழுதிய வரிகள் இவை.......

சனி, 27 நவம்பர், 2010

எறும்புகளாய் நாம் இன்று ..........



அதிகாலை இருளினிலே
விடியலை வரவேற்க்க
பசுவின் சானத்தெளிப்புடன்
வாசல் மொழுகி
நெடுங்கோடு வலைப்பின்ன
கரங்கோர்க்கும் மாக்கோல
அன்னதானம் மங்கையரின்
கைவண்ணத்திலே


இருள் விதைத்த
விடியல் விழிக்க
நெடுநீள வரிசையிலே
மாக்கோல துகள்
சுமந்து மழைக்கால
உணவாக சேமிக்க
துவங்கும் எறும்பு

உதிரும் உணவுகளும்
சேமிப்பில் அடங்கும்
மாக்கோலம் தேடி
தொடுவானம் கூடே
நெடுந்தூரப் பயணம்
சீரான நேர்வழியில்
தொடர்கின்ற பயணம்
செயற்கையான
மாக்கோலம்..........

ஐந்தாண்டு ஆட்டத்திலே
அவ்வளவும் சுரண்டியாச்சு
இனி சுரண்டுவதற்கு
ஏதுமில்லை மக்கள்
உயிர் மட்டும்தான்
பாக்கி இங்கு
அடுத்தவன் தான்
சுரண்டட்டுமே
விட்டுகொடுக்க
மனமில்லையே
மறுமுறை
வாக்களிக்கும்
கரங்களிலே
சலவை நோட்டு
மட்டும் பேசும்
கால்பங்கும்
குறையாது
சுரண்டிசேர்த்த
சொத்தினிலே
பல தலைமுறை
தாங்கும் வம்சத்தையே..........

பறிகொடுத்த சேமிப்பும்
சவமான சொந்தங்களும்
கிடைக்காமல்
தினம் தேடும்
எறும்புகளாய் நாம்
இன்று ..........

டிஸ்கி : நம்மகிட்ட சலவை நோட்டெல்லாம் கிடையாது விருப்பம் உள்ளோர் வாக்களிக்கலாம்,

டிஸ்கி 1 : யார் மனசையும் புன்படுத்தனும்னு இந்த பதிவை எழுதவில்லை மனசுல பட்டுச்சு படார்னு எழுதிட்டேன் அப்படி புண்பட்டால் நான் போருப்பில்லைங்கோ நீங்களே பொறுப்பு

டிஸ்கி 2 : எறும்பை துருப்பாக உபயோகித்ததற்க்கு எறும்பிடம் மன்னிப்பு கேட்கிறேன் தருவாயா, படங்கள் கூகிள்ல சுட்டது படமும் கதைச்சொல்லும்

வெள்ளி, 26 நவம்பர், 2010

துணிவோமா இனியேனும்...........


சலனமில்லா மனது
சாக்கடையில் விழும்
சாதிக்க நினைத்து
துணிந்து தூர்வார பழகு

சிந்திக்க நினைக்காது
சீர்கெட்டு அலைகிறாயே
சிரிக்க மறந்த உலகை
சீர் திருத்த பழகு

சுயம் உன்னில்
சூட்ச்சிகள் செய்வதால்
சுட்டெரித்து
சூட்ச்சிகள் வெல்ல பழகு

செருப்பாக மாறினாயோ
சேற்றில் கால் பதித்து
தொண்டன் எனும் பெயரில்
சாக்கடையில் கொடிபிடிக்க

மக்களுக்கு தொண்டு செய்ய
சாக்கடைகளை சாலவம்
அமைத்து கழிவை
வெளியேற்ற உறுதியளி

உனக்கும் தொண்டனாவான்
ஒருவன் அவனையும்
வழிநடத்து அரசியல்
சாக்கடையை தூர்வார

புதிய தொண்டனாக
தோள்கொடுப்போம்
சீருடை காவலரும்
தோள்கோர்ப்பர் துணிவோமா
இனியாவது .........

வியாழன், 25 நவம்பர், 2010

மலர் மாலை எதற்கு


மணமாலை கொடுத்த
ஆடவன் மறைந்தான்

அருகாமையில் உள்ள
ஆடவன் புதிது

அழைக்க துடிக்கும்
கண்கள்............

அணைக்க துடிக்கும்
இளமை............

அதனை ஏற்க்க
மறுத்த மனது.........

மல்லிகை தோட்டம்
மலர் கோடி கொடுக்க

மலர் தொடுத்த கரங்கள்
மலர் சூட மறுக்க

இந்த மங்கையின்
சடலத்தில்............

மலர்மாலை எதற்கு........

டிஸ்கி : இக்கவி ஒரு மீள்பதிவு தான் சிலர் பார்த்த கவிதனை பலர் பார்க்க என்னி மீண்டும் பதிவிடுகிறேன்

புதன், 24 நவம்பர், 2010

துனிந்து வா...........


நன்னீரில் நனைத்து
துவைக்க மனதை
சகதிகள் களைந்து
சிகப்பு சாயம் வெளுக்க
பட்டாடைப் போல
பளபளக்கும் உள்ளம்

மறந்து துறந்துவிடு
குருதி குடிக்கும்
சாதியை மனதார
மனிதனாவோம்
கல்வி கற்போரும்
கற்பிப்போரும்
கருத்தில் கொள்ள
சான்றிதழில் சாதியை
தூக்கியெறி துணிந்து
புறக்கணிப்போம்
கரம் கோர்த்து


சாதிகளட்ற தனி உலகு
படைப்போம் துறந்து வா
துனிவோடு .....................

செவ்வாய், 23 நவம்பர், 2010

தொடர்பதிவின் தொடர்ச்சி பல்வேறு சுவைகளில் பெண் மனசு -TOP TEN பாடல்கள்.


தொடர் பதிவின் தொடர்ச்சி.........

முந்தைய பதிவை பார்க்க இங்கே சொடுக்கவும்

6, படம் : சிந்து பைரவி

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதிவச்சுப் பழக்கமில்ல
எலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல

தவறை தட்டிகேட்பாங்க பாருங்க

"பழகின பாஷையில படிப்பது பாவமில்ல"
"சேரிக்கும் சேரவேனும் அதுக்கொரு பாட்டப்படி"

5, படம் வாத்தியார் வீட்டு பிள்ளை
படத்துல நம்ம தலைவர் சத்தியராஜ் பாடுவாருங்கோ

அண்ணன விட்டு ஒரு கல்யாணமா
அன்பு கண்கள கட்டி ஒரு ஊர்கோலமா
சிந்தையில் வைத்த அண்ணனும் தான்
பந்தலில் நிற்க்க கூடாதா
அண்ணனும் அங்கே வந்து நின்று
அட்சதை போட கூடாதா

சத்தியராஜ் படத்துல தங்கை பாசத்தில் கண் கலங்கி பாடுவார்
பார்க்கும்போது நம்ம கண்ணும் கலங்கிரும். இதுக்கு மேல முடியல சகோ கொஞ்சம் கண்ணு கலங்குது எனக்கு

4, படம் : திருவிளையாடல்

"பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்"

தென்றலை வர்ணித்து பாடியிருப்பார் தென்றலோடு பயனிக்கற மாதிரி ஒரு அனுபவம் உண்டாகும் கேட்டுப்பாருங்க

3, படம் : கற்பகம்

அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடிவிட்டு
அல்லி விழி மூடம்மா

என்ன அருமையான தாலாட்டு தூங்காம கேளுங்க அவ்வளவு அருமையா இனிக்கும்

2, படம் : மரகதம்
பாடியவர் : சந்திரபாபு , ஜமுனா ராணி

குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்
பொங்குது தன்னாலே

போக்கிரி ராஜா போதுமே தாஜா
பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து
வம்புகள் பண்ணாதே..........

என்னை நடனமாட களமிறக்கிய சந்திரபாபு பாடல்கள் என்னை இன்னும் சில பழமைவாதிகள் சந்திரபாபு என்றே அழைப்பர்

1,படம் : பாக்கியலட்சுமி

மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி காரணம் ஏன் தோழி

இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில்
குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி

வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார்
உடனே மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி பறந்து விட்டார்
தோழி (மாலை)

கனவில் வந்தவர் யாரென கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி
இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அடையாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர் காலம் எதிர் காலம் (மாலை)

மறக்க முடியாத பாடல் என்ன இன்னும் மயக்கம் தெளியவில்லையா சரி அடுத்து யார் யாரெல்லாம் சிக்கராங்கன்னு பார்ப்போம வாங்க வினோ , தமிழ்காதலன் அடுத்ததா பன்னிகுட்டி ராமசாமி (அதாங்க நம்ம கவுண்டரு) சி.பி.செந்தில்குமார் சாருக்கு படம் பார்த்து விமர்சனம் செய்ய நேரம் இல்லாத காரணத்தால் அவரும் தொடரவேண்டும் என்ற என் ஆழ்ந்த கருத்தினை உங்கள் முன் வைக்கிறேன் ஹலோ எங்க போறீங்க இன்னும் முடியல அடுத்ததா களம் இறங்குபவர்கள் நம்ம நாகராஜசோழன் MA (அதாங்க கோல்ட் பிரேம்) அடுத்து கருத்து கந்த சாமி நம்ம பிலாசபி பிரபாகரன் என்ன மக்கா சந்தோஷம் தானே

பி.கு. யாரவது தப்பிக்கனும்னு நினைக்க கூடாது இது அன்பு கட்டளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கவிதை மூலம் வதம் செய்ய படுவர்

ஞாயிறு, 21 நவம்பர், 2010

பல்வேறு சுவைகளில் பெண் மனசு -TOP TEN பாடல்கள்.

வணக்கம் பெண் மனசை வெளிபடுத்தும் அல்லது பெண் குரலில் பாடிய வரிகளை தொடர்பதிவாக இட அழைப்பு விடுத்திருந்தார்கள் ரோசா பூந்தோட்ட சகோக்கள்
நான் ரசித்த பாடல் வரிகளை தொடுத்துள்ளேன்

சுவாசிக்கும் காற்றோடு
கலந்த தேன்சுவை
கீதங்கள் என் தமிழ்
கவிஞர்கள் தொடுத்த
வரிகள் உறவுகள்
சேர உணர்வுகள்
ஏங்கும்
நஞ்சுன்னும்
போதும் அமுதாக
இனிக்கும் வரிகள்
அலைபோல அழைத்திடும்
ஆனந்தம் இதுவென
விமர்சனம் இல்லாமல்
கொடுத்துள்ளேன்
விமர்சிக்க முடியாத
வரிகளை
நம்ம பாட்டி
கடை இட்லிபோல
என்ன பாக்கறீங்க
சுவைத்து பாருங்கள்
சுடாமல் சுடும்
பசிக்கு ரசிக்க
ருசி பறந்து போகும்
சுவையான வரிகள்


10,மாலையிட்டமங்கை'
T.R.மகாலிங்கம்பாடியது

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே

நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே

நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே....ஆ...ஆ..ஆ..ஆ..ஆ .. "

செந்தமிழ் தேன் மொழியாள்

நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள் (நிலாவென) (2)

பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்'

காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ' அவள்

கண்களில் நீலம் விளைத்தவளோ

அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ

பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்
இன்றும் நான் எங்கு சென்றாலும் எனக்கே அறியாமல் நான் முன்னுக்கும் பாடல் இது என்னோட மனசக்கு ஒரு ஊட்டச்சத்து மாதிரின்னு வச்சுக்கலாம் அம்மா இன்றும் சொல்லுவாங்க இந்த பாட்ட எங்காவது கேட்ட என் சின்ன பிள்ளை பாட்டுன்னு

9,படம்: சேரன் பாண்டியன்

சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது
இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது
நீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடி


குமரி நீயும் குழந்தையடி, மாங்கொழுந்து தானே இதயமடி
பொறந்த பாசம் தவிக்குதடி
உன்னை பார்க்க மனசு துடிக்குதடி
என்ன நடந்ததால் உந்தன் முகம் சிவந்தது
இந்த நினைவிலே சோகம் எங்கும் நிறைந்தது
இந்த அண்ணன் இருக்க உனது வாழ்வில் கலக்கம் ஏனடி

அண்ணன் தங்கச்சி மேல வச்சிருக்கற பாசம் அண்ணனா இன்னைக்கும் தங்கச்சி எல்லாருக்கும்

8,படம்:இந்திரா

விடியாத இரவென்று எதுவுமில்லை
முடியாத துயரமென்று எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை
ராரரா…

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

"காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு"
உண்டாகனும்..........


7,படம்: மனதில் உறுதி வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி படைத்த பார்வை வேண்டும்
ஞான தீபம் ஏற்ற வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
தன்னம்பிக்கை வரிகள்
இது தொடரும் நாளைய பதிவில்..................

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி