செவ்வாய், 15 மே, 2018

வாங்கச் சுவைத்து உண்ணலாம்

அன்புள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம் நலம் நலம் அறிய ஆவல். கொஞ்சம் தூசு தட்டிப் பொட்டியை அழுத்தலாமென்று நினைத்து வந்தேன் மறுக்கா வணக்கம் வச்சுக்கிறோனுங்க . 

என்னடா இவன் எழுதுவதே புரியாது இதுல வணக்கம் வேற வச்சிருக்கான் , அதும் தலைப்பு ”வாங்க சுவைத்து உண்ணலாம்”னு வேற வச்சிருக்கான் என்ன பண்ணப் போறானோ எல்லாம் அவன் செயல் . அதே தாங்க அப்புடியே உங்களோட மனநிலையிலிருந்து எழுதுகிறேன் . 


சரிங்கப் பதிவுக்குப் போயிடலாம் விட்டா நான் கிறுக்குத்தனமாப் பேசிட்டே இருப்பேன் . அதாகப்பட்டது கடந்த ஆடி மாதம் ஆரம்பித்த குதிகால் வலிப் பாதத்தைத் தரையில் வைக்க முடியாமல் தொடர்ந்து ஐப்பசி-தை மாதம் வரை ஆங்கில வைத்தியம் ஆகார மாற்றம் அப்படி இப்படியென்று குதிகாலில் ஊசியின் மூலம் மருந்தும் செலுத்தினர். விடுவேனா என்றந்த வலி ஆகா ஆகா ஆகா என்று சிரித்துக் கொண்டே இருந்து. 


பக்ரைனில் நம் நாட்டு மருத்துவர்கள் மீது நம்பிக்கைச் சுத்தமாகப் போனது ஏனென்றால் குதிகாலினுள் மருந்துச் செலுத்தியும் வலி தொடர்கிறதென்றச் சொல்லுக்கு ! தம்பி நான் வேண்டும் என்றால் இலவசமாக இன்னொரு முறை மருந்து செலுத்துகிறேன் உன் குதிகாலில் என்றார் . எப்படியிருக்கும் எனக்கு என்று சொல்லுங்கள். ஆகா ! தினேசா உன்னை அப்படியே உபயோகிச்சுக்குவாங்கன்னு நம்மக் கிளிச் சொல்ல உள்ளே தெளிவானது. ஒரு மாதம் விடுப்பெடுத்து ஊருக்கு வந்து சேர்ந்தேன் . 





வந்ததும் வந்தேன் பிறந்த மண்ணுக்குப் பிரண்டைத் துவையலும் முடக்கறுத்தான் கீரைத் தோசையும் காலை உணவாக அம்மாவின் கையால் கிடைக்க உண்டுவிட்டு முதல் வேலையாக எலும்பு மருத்துவரை சந்திக்கச் சென்றேன் , அவர் என்னைப் பரிச்சோதித்துக் குதிகாலில் உள்ள சதைப் பகுதிச் சுருங்கிப் போயுள்ளது இருபது நாட்கள் நான் கொடுக்கும் மருந்துகளைக் கழித்து வாருங்கள் குணமாகிவிடும் என்றார் ஆனால் கொடுத்த மருந்துகள் அனைத்தும் வலியை மருக்கச் செய்வதற்காக உண்டானவை. எனக்கு நம்பிக்கைப் போனது பக்ரைனிலும் அதே வலி மருள் மருந்துகள் தான் கொடுக்கப்பட்டது இங்கேயும் இப்படியா என்று சற்று யோசிக்க ஆரம்பித்தேன் . 


மருந்து எடுத்துக்கொள்ளவில்லை. சரியான தீர்வு வேண்டும் என்பதே எனக்குள் எழுந்த கேள்விகள் . அடுத்த நாள் விழுப்புரம் சென்றேன் சித்த மருத்துவம் படித்த மருத்துவரை சந்திக்கச் சென்றேன் சந்தித்தேன் அவர் முதலில் எந்தன் எடையைப் பரிசோதித்தார் 82 கிலோவாக இருந்தது, உங்கள் உடலில் அதிகக் கெட்டக் கொழுப்புகள் அதனால் கல்லீரல் பாதிக்கப்படும் தருவாயில் உள்ளது அதனால் தங்களுக்குக் குதிகால் வலி ஏற்பட்டுள்ளது . உடலின் எடையைக் குறைக்க உணவு முறைகளை மாற்றுங்கள் என்றார். 


அய்யா நான் காலை உணவாகப் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களும் , மத்தியானம் சோறும் சாம்பாரும் அல்லது கூழ் , களி அல்லது கஞ்சும் துவையலும் , இரவில் கேழ்வரகு அல்லது கம்புத் தோசை இப்படி மாற்றி இரண்டு மாதங்கள் ஆகின்றன என்றேன் ( ஆங்கில மருத்துவர் இறைச்சியைத் தவிர்த்து எடுத்துக்கொள்ளச் சொன்னதால் நானாய் தயாரித்த உணவுப் பட்டியலைக் கடைப்பிடித்தேன் ). 



சித்த மருத்துவரோ நீங்கள் கடைபிடிக்கும் உணவுமுறை தவறு நீங்கள் இனிப்பு வகைகள் அதாவது பழவகைகளே கழிக்கக் கூடாது உங்களுக்குச் சர்க்கரைத் துவங்க உள்ளது என்றார், எனக்கோ மேலும் அதிர்ச்சி. சரி நான் தரும் பட்டியல் படி உணவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று பட்டியலைக் கொடுத்தார், நானும் தயாரானேன். 


அதாவது 

காலை உணவு : 

மூன்று கோழிமுட்டை எப்படி வேண்டுமானாலும் சமைத்து எடுத்துக் கொள்ளலாம் 

மத்தியான உணவு : 

ஆடு அல்லது கோழி இறைச்சிச் சமைத்துச் சோறில்லாது வயிற்றுக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம் (சோறு மட்டும் எடுக்கக் கூடாது வேண்டுமென்றால் ஒரு கரண்டிச் சோற்றைத் தொட்டுக் கொள்ளலாம்) 

இரவு உணவு : 


முட்டை அல்லது இறைச்சி 


இடையிடையே பசித்தால் எலுமிட்சைச் சாறு அல்லது தயிர் மோர் அல்லது பாதாம் எடுத்துக் கொள்ளலாம் . 


ஒட்டு மொத்தமாகச் சொன்னால் இறைச்சி முட்டையைத் தவிர வேறெதுவும் எடுத்துக் கொள்ளக் கூடாது இதானுங்கு . 


அவரும் சில பல குளிகைகளைக் கொடுத்தார் சா.மு , சா.பி என்று மனதையும் வாயையும் கட்டிப் போட்டுவிட்டுச் சம்மதித்து ஏற்றுக்கொண்டு செயலில் இறங்கினேன் . முதல் நாள் மிகவும் சிரமப்பட்டு உணவருந்தினேன் முதல் நாள் மட்டுமல்ல பதினைந்து இருபது நாட்கள் சிரமப்பட்டே உணவருந்தினேன் ஏனென்றால் நான் விரும்பி உண்வதோ சாம்பாரும் காய்கறிகளும் அதை விட்டுவிட்டு இறைச்சியை உண்வது எனக்கு அதிகம் பிடிக்கவில்லை . 


சரி வலிக் குறைந்ததா என்றால் அதுவும் இல்லை எடையாவது குறைந்ததே கொஞ்சம் என்றால். 


பின்னக் குறையாம என்னப்பண்ணும் ”விரும்பிச் சுவைக்காத உணவு” என்ன பயன் தரும் என்று நீங்களே சொல்லுங்களேன் 


கலியுகம் : தூசெல்லாம் தட்டியாச்சு அடுத்தப் பதிவில் சந்திக்கிறேன் இதுவே நீளமாக இருக்கிறது . கவிதைக்காரனுக்கு என்ன ஆயிற்று என்று புலம்ப வேண்டாம் . கண்டிப்பாக இந்தப் பதிவின் தொடர் வந்து கொண்டே இருக்கும் . நீங்களும் வாங்கச் சுவைத்து உண்ணலாம்

திங்கள், 2 அக்டோபர், 2017

இன்று பொருந்துமென ...!

இன்று பொருந்துமென இருந்தாரில்லை 
இன்னல் திரியுமென வளர்த்தாரெல்லை 
அன்று மருந்துமென அருந்தாரில்லை 
அன்னம் அரியுமெனக் கிடந்தாரில்லை 
நின்று நடந்தன விளைத்தாரெல்லை 
நித்தம் கடந்துயர் உடைத்தாரெல்லை 
ஒன்றை உணர்ந்திட அடைந்தாருள்ளே 
ஒன்றாய் உரைந்திட அடைந்தாரெல்லை



திங்கள், 6 பிப்ரவரி, 2017

4.மாய மனதில் துளிர்த்தவை...!

மக்களைக் காக்கும் மாரி மகமாயி 
மன்னவன் கோலை மாற்றும் மயமாக 
சிக்கலைத் தீர்ப்பாய்த் தாயே தயவே;நீ 
சித்திரம் கொண்ட சீற்றம் உனதாக 
சுக்கிலாத் தூளாய்த் தூற்றுத் துவண்டோடும் 
சுந்தரம் மீண்டுத் தோன்றும் அரும்பாக
வக்கிரப் பேயை மாய்த்து மழையாகு
வந்தெமைக் காக்கும் தாயே மகமாயி

காலம் கனிவதிலே கோணங்கள்
கானல் எனப்பதியக் கூறுங்கள்
கோலம் எனத்தணியாக் கோளத்தில்
கோழை எனப்பனிந்தான் கூடத்தில்
வேலன் கனவுகண்ட வேடங்கள் 
வேளை வரமுயன்றும் தேக்கத்தில்
பாலம் படகிலென்றான் ஞானத்தால்
பாராய்ப் பழகுமென்றான் ஞாயத்துள்

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

3.மாய மனதில் துளிர்த்தவை...!

வெந்துதான் தணிந்ததெங்கும் கூடு 
வித்தகன் அணிந்ததவுருச் சாம்பல் 
பந்துதான் பணிந்துவிடும் என்றால் 
பந்தமும் துறந்ததிந்தக் கூட்டை 
சுந்தரம் சுகமருந்தாய்த் தோற்றம்
சுக்குதான் தவமிருந்தோ தேற்ற
விந்தைகள் தயவறிந்தக் கூற்றால்
விஞ்சுதல் பதுமைகளாய்த் தோன்றும்

சனி, 4 பிப்ரவரி, 2017

2.மாய மனதில் துளிர்த்தவை...!

1.நரசிம்ம அரிதாரம் பூச்சிட்டு 
நடக்கட்டும் அவதாரம் ஒன்றென்றே
அரியெண்ணப் பரிகாரம் தந்தாலும் 
அவனுண்ண பலகாரம் தந்தாயே
வரமொன்றும் கொடுப்பானோ என்றாடி
வயலெங்கும் பெருங்காற்று வீசிற்றோ
தரமென்றுத் தரவாகத் தங்கிற்று
தயவென்றுத் தலைதூக்கி வைத்தாடு

2.களவற்ற கண்ணே மணியே 
....குணமுற்றத் தன்னா லறிவாய் 
இளங்கன்றே இன்னார் இதயம் 
....இரும்பென்றக் கொள்கை மாற்று 
களத்தமேடுக் கழனி வாழ்வை 
....வருங்காலம் ஏற்க உணர்த்து 
கருத்துவிரை யும்பா ராது 
....பயங்களைந்து ஏறாய்க் கொழுந்தே ...

3.கற்றறிந்தோர்ச் சிந்தனையில் உதியும் கவியே 
பாக்கியமுண்டாகும் அவர்க்கு வழிபோன என்னை 
நிறுத்திஉள் புகுந்ததேனோ அறியேன் அறியேனே 
உன்னை அறிவார் உள்புகும் அன்னமே 
விட்டுசென்றாலும் தொட்டெனைத் தொடராய் 
தோல்வி யெனதில்லை தோற்றம் கொடுத்தேன் 
கல்லேன் கல்லேன் என்றல்லக் கல்லுவதென்று 
காயாகிப் பழமாகும் கோலம் உகந்ததே நான் 
கல்லாது கடந்துவிட்டேன் கொல்லாது கொள்ளும் 
தாயே என் தமிழன்னாய் நீயே பதில் கூறு ....
Image result for சிந்தனை

வியாழன், 2 பிப்ரவரி, 2017

1. மாய மனதில் துளிர்த்தவை ...!

1. குதிரை ஏறியே குற்றம் 
குரவை ஆடிடும் மேடை 
சதியை ஆற்றிய ஒற்றன் 
சரணம் பாடிடும் மேடை 
உதிரம் ஓடிட மொத்தம் 
உணர்வைத் தூண்டிடும் மேடை
கதியைத் தேடியே சுற்றும்
கவனம் ஆண்டவன் மேடை....

2.உற்றவை ஏற்றுச் செல்ல 
உருத்துதாம் ஊராய்க் கொள்ளார்க்கு 
அற்றவை நேற்றில் கொண்டு 
அளந்திடும் கூற்றில் சோறாக்கும் 
கற்றவர் பூண்டக் கார்யம் 
கவர்ந்திடக் கோர்க்கும் போர்வைக்குள்
பற்றவை தோற்றம் தீயாய்
பறந்தது போற்றும் கோணத்தால்



3.கயிலை நாதனே காளை வீரனே 
கானல் போக்கியக் காலச் சூரனே 
மயிலை வீற்றிர நாளும் தேடினோம் 
மாலைச் சூடிட மாற்றம் வேண்டினோம் 
பயிலும் மாணவர் பாலர்த் தானவர் 
பாலம் போடவே பாதை நாடினோம்
ஒயிலாய் நின்றொரு காட்சித் தந்திட
ஒன்றாய்க் கூடிய தேரில் சாட்சியாய் ..

4.நிரந்தரமே தலைமுறைக்குத் தீர்வு 
நிழலெனவா நடைமுறைக்குச் சோறு 
அறிந்திடடா அவலநிலை ஆட்சி 
அமைந்ததுவே அகிலமெல்லாம் சாட்சி 
புரிதலில்லா அமைச்சரவைக் கூட்டம் 
புதுயுகமாய்ப் பிறக்கவிடா ஆட்டம்
நரியெனவே நடந்துகொள்ளும் காட்சி
நடந்தவையோ நடிகனெனும் சூழ்ச்சி

5.ஆதிசிவன் காளையுடன் வந்துவிட்டான் தமிழனென்றே...! 
அம்மையப்பன் ஆகநம்மை ஆளுகின்றான் தமிழனென்றே...! 
சாதிகளை விட்டெழுந்த வேள்வியிலே தமிழனென்றே...!
சாதகமாய் மாமருந்தைச் சாரமிட்டான் தமிழனென்றே...!
நீதிமுறைத் தாண்டவத்தில் மீளுகின்றான் தமிழனென்றே...!
நீண்டவொரு போர்படையை மீட்டுவிட்டான் தமிழனென்றே...!
பாதியிடம் பார்வதிக்கே பங்களித்தான் தமிழனென்றே...!
பாதையினைச் சீர்படுத்த சீடனுருத் தமிழனென்றே...!

சனி, 14 ஜனவரி, 2017

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்...

தாயாகித் தகப்பனாகித் தானுமானச் சேயுமாகி
தான்தோன்றித் தவக்கடலே இன்னார்க்கும் இல்லார்க்கும்
ஆயாது அருள்புரியும் ஆகாயம் மீதமர்ந்த
ஆதார அலையான ஆதிக்க ஆழ்மனமே
தீயான சுடர்தங்கி நீங்காத தீர்வாகி
திண்டாடும் அழைப்பினிலே சீரான வான்ஒளியே
தேயாத அணுவாகிச் சேதாரம் சேர்த்துண்ட
சீவனே;ஓம் நமசிவாய நாதனருள் போற்றிபோற்றி...

அனைவருக்கும் இனிய

தைத் திங்கள் ...!
தைப் பொங்கல்...!
தைத் திருநாள் ...!
உழவர்த் திருநாள் ...!
தமிழர் திருநாள் ...! வாழ்த்துகள் ...!


நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி