பச்சை சேலை கட்டி வா,நீ
வயகாட்டு சோலையம்மா
பக்கம் வந்து சொக்கி நிற்க
ஆகாத தலைமுறை நான்
எட்டு கட்டி மெட்டு கட்டி
எகத்தாளம் விட்டு வெட்டி
காக்கூழும் அரைக்கஞ்சும்
மல்லாட்டை துவையலுந்தா
சொல்லச் சொல்ல நா அருந்த
தேடிச் செல்ல பாதை இல்லா
பரிதவிக்கும் மனசு ஆறுதல்
யார் சொல்ல யார் வெல்ல
பசுவுக்கும் கன்று நான் பணம்
படைத்த எண்ணம் பளிங்கு நாட
திண்ணம் பழக்கம் வந்த திசையை
பழிக்கும் எந்தன் குணமே குறை
சொல்லி மாளாது சோகம் தீராது
சோற்றில் பிடித்தவழ கனவாகுமா
இன்று பொழுதும் ஒருபிடிச் சோறும்
ஏலத்தில் எடுத்த வாழையிலை
எனக்கென்ன உனக்கென்ன
கெட்டா தடுப்பாயா கேட்டா
கொடுப்பாயா எல்லாம் விட்ட
வழி வயலுந்தன் சோலையம்மா
பச்சரிசி பொங்கலும் பசும்பாலும்
பொங்கணும் பன்னீர் கரும்பினிக்க
வாழ்ந்தோரை வணங்கி நிற்கும்
வழி தவறிய தலைமுறை நான்






