புதன், 19 நவம்பர், 2014

மணிகண்டன் மாலை ....!

வானதிர வாரான் வனப்புலி வாகனம்மேல்
                    தானதிரு தாயுமான வன்புதல்வன் பூலோக
நாதனவன் தானறிந்த நாடகமாய் காணவே
                    பாதபலன் தீர்ப்பவனே பாகமென வேர்பின்னி
தேகநலன் காப்பவனே தேடநில வானவனே
                     தாகமெழில் கூட்டிட தன்னைக் கலவுவான்
ஏக்கத்தை சொல்லில் சிதறுவான் போக்கிலே
                     நோக்குக எங்கும் உலவுவான் காத்திருக்க

கார்த்திகை கோலமே காணவழி தோறுமே
                      நேர்த்தியை ஓதுமே நேயர்வழி தேறுமே
சார்த்திய போதுமே சாந்தமுனை ஆளுமே
                     வார்த்தையுள் காணவே கோர்த்த வடிவமே
பார்பெரும் கோடியை கொண்ட குடியாகி
                     யார்தருவா ரென்றெண்ண மாயை உருவமே
கார்தருதே நீர்பொழிவை நான்ஒ டித்திருமே 
                    தேர்கொணர் வானேயுன் மையச் சொரூபம்

காட்டுவழி பாதையிலே கால்கடத்தி வர்றோமே
                    காட்டும் வழிவாழ்வி லேகாணும் காலத்தே
கோட்டை யினைநாடி என்னைதேக்க ஆதாரக்
                    கூட்டை விடமாயம் உள்ளதெரு சேதமாய்
நாட்டில் நடவுதே நான்கெட்ட கேடுமங்கு
                    காட்டில் உலவுவ வீனங்கு வாஎங்கும்
சட்டம் பெரும்பாகம் சூழ்ச்சியிலே மாயுது
                   பட்டம் உருள்வதை கண்டேனும் தீர்க்கவா





                        

செவ்வாய், 18 நவம்பர், 2014

மிஞ்சி உடன்வருவார் இன்னும் உலகிலே...!

சிக்கி தவித்தேனே சுக்கும் திணித்தேனே
சொக்கி கவிழ்ந்தேனே திக்கும் மறந்தேனே
வக்கில் இழந்தேனே மக்கும் உடல்தானே
சக்கை பிரிந்தென்ன சுள்ளியாய் மாற்றி

அஞ்சிட வேண்டாம் அரளியை அள்ளியேன்
கொஞ்சிட வேண்டும் கழனி(யை)யே கற்பகத்தேர்
கஞ்சி கடந்தருவார் காலத்தை கோளத்தில்
மிஞ்சி உடன்வருவார் இன்னும் உலகிலே

அல்லியே ஆற்றும் அகமெல்லாம் கடந்ததை
சொல்லியே சாற்று சிலையணிய மாலையை
கல்லில் கடைந்தவன் காதல் கலந்துலாவ
நல்லினமாய் தேற்றிடும் நாதம் அறிவாய்

எள்ளிலே எண்ணம் எழுத்தெழ தன்னையும்
அள்ளியே கண்ணம் கழுத்திணை உள்ளதை
கொள்ளுவாய்  மெல்ல கடவுவான் வண்ணமே
அள்ளுவாய் எண்ணம் புயலென கல்லும்

அற்றதும் ஆடியென் அர்த்தப்படி ஆகுக
உற்றதும் ஊரும் உரியதென ஆகுக
கற்றததன் நாளும் கடத்துவன் ஆகுக
பெற்றதன் பாக்யம் நடந்துவன் தாங்குக....

சனி, 15 நவம்பர், 2014

மயக்குகிறாய் என்னை ....!


மயக்குகிறாய் என்னை மழைக்குள் நயமாய்
இயக்குகிறாய் ஏர்பூட்டி தன்னை உழுதாளும்
எண்ணம் விதையாகி வண்ணம் உருவாகும்
கண்ணன் உதித்தான் காண்

கடலை கடந்தோட காணும் அலைபோல்
விடலை படர்ந்தாட சூழ்ந்த மனம்போல்
இளகும் இளம்பாகி னிக்கும் இனம்போல்
விளகும் இருளே சுயம் 

மிளிரும் குணமே மனதுன் துணையே
துளிரும் இளமே இனதுன் கணையே
கடவும் உளிலே கருத்தும் இணையேன்
நடவும் தெளிவாய் கட

என்றும் உனதான கண்ணன் குழலூத
கன்றும் உறவாட கண்ணம் இழைத்து
பிறந்த புதுபாலன் அண்ணல் உயர்வாய்
திறந்த மனதோடு எண்




வெள்ளி, 7 நவம்பர், 2014

கணைதனில் உள்ளக்கரு அள்ளும்...!


அர்த்தமாய் உருமாறி உமையாள்தன் இடமேறி
        தக்கநிலை கொடுத்தனவோ சொக்கன் சொக்கியே
சுயமிழந்தான் உற்றதொழில் தனை மறந்தே
        நித்தமெழில் செழித்தெழவே தடை தகர்த்ததரி
பித்தனாகி சித்தனாகி சுத்தமெனும் சுடர்கொணர
        அந்தமாகி அணுபந்த மாகிசந்த மியற்றுமால்
திருவென்ற உருவொன்றாய் அருகிட அருளும்
        அவணியே அவனுரு கொள்வானுள் குடியாம்

சிங்கமொடு காட்டிலே தங்குமறை கூடாய்
        திங்குமரு புல்லினம் தாங்குமருள் மேனியே
நிற்கதுணை வேண்டியே உடுத்தும் உடையாய்
        யாருனை தீண்டுவாரே தூணாகிடும் அரண்
அண்டுவா ரில்லாத தொண்டு தானில்லை
        விண்டதாகம் மொண்டு தானருக தூண்டும்
நிலைகொள்ள நிம்மதி தனைக் கொள்ளும்
        விரதவியா பாரமாய் திரித்தது வெல்லும்

தரித்ததை சொல்லும் தகனமே அல்லல்
        பகலுமே கொள்ளும் பசித்த மயக்கம்
விரித்ததை வெல்ல வினைதான் செல்ல
        கணைதனி லுள்ள கருத்தினை அள்ளும்
கழற்றினி வேடம் களைத்த உருபோதும்
        களம்நிறை கொண்ட கயவனாய் உள்ளில்
கலைச்செல்ல காலம் நடத்தும் விளையாகு
        அரங்கேற்றம் காண விரைவான் அங்கு

அர்த்தநாரி யாமவன் சொல்லும் அர்த்தங்கேள்
        உனையுற்று நோக்கவே எங்கும் காணுவாய்
தினமரிந்த மந்திரம் திரியங்கும் எந்திரம்
        நகலிலா திருநகையு மாயுரு காணுவாய்
பகையிலே திகழுமகம் கொண்டதற மனதே
        கொணர்வாய் பாக்யநாத பக்கம் காணுவாய்
தாங்கிய தேகமினி வேண்டாவிடு வாக்யம் 
        தங்குமேட்டி லேயிரும் திவ்யம் காணுவாய்

புதன், 5 நவம்பர், 2014

வேண்டுவன தந்துவிட்டால் ...!

யதார்தமாய் கரையொதுங்கி பழக வேண்டும்
          நிவர்த்தியாய் நீர்த்தளும்ப ரகசியம் வேண்டும்
சுதாரித்து சுகமதுவை தேக்கவே வேண்டும்
          பதார்த்தமே பலவகையாம் பசிக்கருசி வேண்டும்
நிதானித்து பெறும்பலவும் சேர்ப்பினில் வேண்டும் 
          பணதாகம் பிணக்கதுவும் தீர்க்கவே வேண்டும்
பகல்கனவு பயிலுமிரவும் பக்கமென வேண்டும்
          பசித்திருக்க பாக்யமாய் பிரசாதம் வேண்டும்

பணிவோடு உன்பாதம் சரணடைய வேண்டும் 
          கனிவோடு காக்கையும் இனமாக வேண்டும்
கற்றாரை போற்றியெங்கும் பார்பழக வேண்டும்
          உற்றாராய் உணர்வறிந்து தானெரிய வேண்டும்
நிகரேதும் சொல்லாது தனியனாக வேண்டும் 
          கடலாடும் காட்சிநிறை ஆட்சியே வேண்டும்
உடன்பட்டே உருமரணம் உண்டாக வேண்டும் 
          கடன்பட்ட கார்யமாய் கரையொதுங்க வேண்டும் 

படுத்துறங்க பலகாலம் நித்திரை வேண்டும்
          உடுத்திறங்க உடைதாங்கி காப்புகள் வேண்டும்
நடுவரங்கம் சலித்துறங்கா காட்சியே வேண்டும்
          தடுவனவும் நடுவனவும் தழைத்தெழ வேண்டும்
கரம்தொட்டு சிரம்தொட்டு மழைத்தூற வேண்டும்
          கருநாக குடைக்குள்ளேன் காரணம் வேண்டும்
பயிராகி வயிறாரும் உணவாகிட வேண்டும்
          இல்லார்க்கும் எடுத்திரைக்கும் உரிமை வேண்டும்

வேண்டுவன தந்துவிட்டால் உனைதான் யாரும் 
          தீண்டாத சிற்பமென சொற்ப்பமாய் மொய்ப்பர்
வேண்டாத சொல்லில்லை உன்னை நோக்கிவர
          உன்மெய்யும் சேர்ந்ததுவே கொண்டாடும் உயர்
திண்டாட்டம் வேண்டாவே செல்லாதிரு கணக்காய்
          மெல்லோட்டம் போட்டிடு வல்லிய திருவாய்
தென்றலென தொட்டுப்போக உத்தரவிடு வரிய
          வந்தவனாய் சொல்லிவிடு வயக்காடு பொழிக்க
          


செவ்வாய், 4 நவம்பர், 2014

நிச்சயவுயிர் கூடு ...!


நேற்று பிறந்தது போலே நடவதை
காற்று கவர்ந்தது நேரே கனமுடன்
ஆற்றை கடப்பது பாழே நிவர்த்தியின்
தோற்றம் எதுவென தேடு

சோற்றுப் பசியாம் பானைக்கு காற்றே
இடம்புகுந்து வட்டம் போடுது சேற்று
சகதியில் கதிர் மடிந்து எனையுற்று
நோக்குதே கடிந்து பசிக்கு ஒடிந்து

கொல்லிடம் கோருது புல்லிடம் பாரடி
தேவி வறண்டோட வாதம் திறப்புக்கு
கரை புரண்டோட தேக்கம் திறந்திருக்கு
நீதி கொலையாளி ஆனேனாம் நான்

பச்சை வயக்காடு நிச்சயவுயிர் கூடாய்
மனதில் குடியேற மக்கள் திசைமாறும்
மாற்று வழிதேடும் வாட்டும் பசிபோக்க
சேற்றி லுழுவார்கு காணிக்கை நீயாயிரு

பொருத்து புகழ்பாடு பச்சிளம் கூட்டில்
புகுத்து பழம்பாட்டை பூக்கும் புதுயுகமே
காக்கும் வழியனைத்தும் உன் சாமர்த்யம்
உத்தமர் தன்வாழ்வின் ஊற்றே உணர்...


ஞாயிறு, 2 நவம்பர், 2014

கவலை தீராயோ கடலே...!


அதிகாரம் ஆண்ட கடல்கொண்ட தேசம்
சதிகாரன் தூண்ட விழுங்கிய மீனவர்
தேகம் புரியா பிழையாய் விளையுதே
சோகம் தினம்தினம் திக்குமாறி

கண்டதைக் கொள்ள கயவனாய் அல்ல
அடுப்பெரிய வீட்டில் துடுப்பெடுத்த ஓட்டம்
தள்ளாட்டம் போடும் அலைகளோடு கூடி
அடைகாக்க எண்ணா அநியாயம் அங்கும்

தடைச் சொல்லுவா ரேனோ கடலள்ளும்
கொள்ளையர் தானோ கடமைசிகை கோதி
கதிகாரணம் சொல்லடா அண்டைதேச மென்னடா
அங்கும் வழிக்குபங்கு பிண்டமாய் செல்லுதா

ஆண்டவன் போலின்று ஆயுதம் தாங்கவே
பொல்லாது போகும் பொழிக்கும் மழையே
சிவந்தது காணும் துணுக்குமினி வேண்டா
பொருக்குமுன் பேராபத்தை பேசித்தீர்

போர்காணா வேங்கை உறங்கமாய் உள்ளே
அவரவர்க்கும் நேர்காண வேண்டாம் விதியே
சதியின்கதி மாற்றிக்கொள் கோவணம் மிஞ்சும்
அகிலமே அஞ்சும் அரசாண்ட வம்சம் 


நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி