அடி ! அம்மாடி நீயெந்தன் முன்னோடி
நானிசைய நாவழையும் தாகம் தலையாட்டி
தேரடியை பாராய் பவமணியும் பாரம்
பராபரமே நாற்புரம் சூடா மலராய்
நானிசைய நாவழையும் தாகம் தலையாட்டி
தேரடியை பாராய் பவமணியும் பாரம்
பராபரமே நாற்புரம் சூடா மலராய்
நிறையா மதியும்மதி ஆழும் மயக்கமதில்
மாயனெந் தன்மாயை ஆளும்மா றுதல்காணே
நேருடல் வேரிட ஆறுதல் ஆனேன்
மருவிமா யாவி குருவிகூடு தாவி
மகுடியிலி சைக்குதென் மாயை மறுபிடி
தாங்க மையலுன்னை மீட்டதா வணியில்
தலைமலர் பாவண்ணம் பாட
நானாடும் நாட்டிய மேடையுடன் தானாட
தள்ளாடும் தாளகெதி திண்டாடும் பாதமலர்
சொல்லாடும் சிங்கார பாலமுத பாவை
பரியமர சாலையுந்தன் சாரமே சர்வேசா........!
மகுடியிலி சைக்குதென் மாயை மறுபிடி
தாங்க மையலுன்னை மீட்டதா வணியில்
தலைமலர் பாவண்ணம் பாட
நானாடும் நாட்டிய மேடையுடன் தானாட
தள்ளாடும் தாளகெதி திண்டாடும் பாதமலர்
சொல்லாடும் சிங்கார பாலமுத பாவை
பரியமர சாலையுந்தன் சாரமே சர்வேசா........!






