ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

சொல்லது தூவும் பிழை ...!





காற்றிலாடும் சுடரே சுயம்பவன் 
நேர்த்தியாய் நின்னலைப் படைத்துவக்கிய 
தவத்திற னாற்றுவன தோற்ற தற்க்கினை
யாற்றும் யாவுமென் சிதையே

உயிர் மெய்க் கலவையாய் ஆயுதமேந்தி
வல்லிய திடைக்காக்க மெல்லிய தாகம்
சிந்திய சிதறலெங்கும் விருட்சமாய்
நிழற் தர தொடர்ந்தே 

இருகியப் பாறை கற்கண்டாய் உருகி
நற்க்கொண்டாய் நாவியல் சாற்றும் 
முதற்கண்டோர் போற்றி நின்னை 
சரணடைய வீழ்த்தும் தடாகம்

நீரன்றி வேர்த்து தூர்த்து மாயும் 
சல்லடை சகிதம் அம்பு துளைக்க
நில்லாது பாயும் வல்லது மேனியிற்
சொல்லது தூவும் பிழை....! 





சனி, 21 ஏப்ரல், 2012

என்னவள் கரம் பிடித்த நாளின்று

விரைந்து தான் செல்கின்றது பரந்து
விரிந்த உலகில் நிமிடங்களை வெறுமனே
விட்டுவிட்டால் கிட்டுவதில்லை திரும்ப
ஓராண்டுகள் முடிவின் துவக்கம் 

வசந்தம் வீச வாலிபங்கள் வயதணியும் 
வாடாமலரன்றி நீடும் நிகழ்மாற்றம்
சாடுவன அனைத்தும் நம்மில் சாரமாய்
ஏற்றம் காணுவது அறிது

பாடும் பாவையன்றா என்னை அவணியில் 
மணமாலையுடன் தேடி நின்றாய் சூடும் 
நேரமறிந்து ஆட்டுவித்தான் காட்டிவைக்க
கரம் பிடித்த நாளின்று 

காரணிகள் நமையாண்டும் மாறத
மனம் கொண்டோம் மண்ணவளும்
மகிழக் கண்டேன் என் மன்னவளே
உள்ளில் இல்லம் கொண்டவளே......

எனையாளும் பூவிழியே பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்...

திங்கள், 9 ஏப்ரல், 2012

உதிரும் சருகெனும் மாயவலை...!



என்னை யெவ்விடத்து சுற்றவிட்டு
            எங்கங்கே தகிக்கவிட்டு தேடுகிறாய்
ஏதேதோ பிதற்றங்க சந்தருகும்
           ஏலனத்தால் மாண்ட தெருவிதி
சற்றுமெதிர் நோக்கா சந்தித்த
            சாரம் சிந்திக்க நேரமற்று மேலேற
சிக்கிய பிடிதனிற் பயணம்
            சிகைக்கோதும் விரலதுமறியா

சிதையுமது சதையுமென சாரல்
             சாதகமாறிய சூதன விரிப்பில்
பாதகனாண்டவை பகுதியும்
             மிகையல்லா தகுதியும் தானே
தரைப் புரண்டோட தொலைவில்
             உதிரும் சருகெனும் மாயவலை
வீசியதாரோ வினைத்தவன்
             சூடுமிழை தொடுத்தவன் யாரோ


புதன், 4 ஏப்ரல், 2012

துளியும் துகளும்


கண்ணே கருணைகள் புதைபட்டு கலங்கிட
காரியம் முடிசூட முன்னவனும் பின்னவனும்
கிழக்கும் மேற்க்குமாக எல்லைகள் அற்று
கீரிய சடலமாய் திணறுகிறேன்


துளியும் துகளும் சுடரால் அகல
வலியும் வனப்பும் பாகம் பகைபட
சுவையும் சுனைநீர் அவையறியா
கண்டோர் காணும் உலகு ...



குணக்குட்டி யெதையொட்டி வனவட்டக்
குரலோனே நிலைத்தொட்டு நிகரென்ன
கூவி குறையடுக்கி நிறைக் காணக்
கூடலில் ஆழும் நதியே.....

ஞாயிறு, 25 மார்ச், 2012

ஓவியமாய் தீட்டி வச்சாங்க......!

அத்தனையும் படிச்சான் 
அங்கெங்கும் அலைந்தான் 
ஆள்பதற்க்கு மட்டும் திரையில்
ஆட்டம் போட்டவரை பிடித்தான்

இடிச்சப்புளி உலக்கயிலே
இளஞ்சிவப்பா இளிக்குதையா
ஈசன் கட்டுவான் இல்லாமல்
ஈட்டெடுக்கலாம் நாளை

உசிரக் குடிக்கான் மறுக்கா 
உரக்கம் தெளியவே யில்லை
ஊதிக் கொக்கரிக்க நாதியுமில்ல
ஊலைநரிக் கூட்டம் போட

எட்டி பார்க்குது எங்ககிட்ட
எட்டனா தான் எஞ்சி நிக்குது
ஏட்டையும் மாத்திபுட்டான்
ஏணியையும் தட்டிவிட்டான் 

ஐந்தும் அவர்கட்கே என்றால்

ஒட்டு துணிக்கேது வழி விரல்
ஒட்டிய மையை துடைக்க
ஓட்டாண்டி ஆக்கிவிட்டாங்க
ஓவியமாய் தீட்டி வச்சாங்க
 
ஔ..........................................

திங்கள், 5 மார்ச், 2012

பூவணி மாலையும் புன்னிய தேடலும் ...!


பச்சைத் தாவனி கட்டுவா யென்று 
பட்டதும் சுடலையில் பாவம் தீராய்
பல்லதுப் படாமல் மெல்லுவாயெனி
பசித்துறங்க பழகு

பார்த்ததும் பகுந்து விட்டாய் வேர்த்தது
பானைக்குல் பதுக்கி வைத்தாய் நீர்த்தது
பாவையின் விழிகளன்றோ அறியாப் 
பாவியாய் பல்லுருவில்

புசித்தது புகட்டி விட்டாய் எங்கோ
புயாலாய் கிளம்பிவிட்டாய் அங்கோர்
புலியென பரனை சுரண்டக் கண்டே
புல்லாய் மாற்றம் என்ன

பூவணி மாலையும் புன்னிய தேடலும் 
பூர்ணச் சந்திரனாய் புன்னகை தவழ 
பூவுலகு பசித்தும் புசித்துறங்கா நீதி 
பூரணத்துவம் காணா விடியல் 

திங்கள், 27 பிப்ரவரி, 2012

நாளும் வாழ்வான்..................!

அற்றதும் தொடர்ந்துன்னில் ஆற்றா 
கடமைகள் புதையுண்ட நிலை காண
உற்றதன் துணைக் கொண்டு புதையல்
தேடப் பயணத்தை துவக்கு

புறம் காணா மறைத்து வைக்க
அகக்கோலின் அடியளந்து ஆழ்ந்துழ 
எட்டாப் படியும் கிட்டாக் கனியும்
அருகே அவணியில் காண்

சுடச் சுட சூடும் தணியும்
தனியாத் தாகம் தஞ்சம் புக
எஞ்சும் ஏகாந்த நிலையில் நீரூற்று
அணுகிப் பருகா இன்பம்

இவைதானோ இலைத் தழைக்கூடு 
இன்னோர் பிறவியெடுப்பினும் இயல்
சாடுவன நிவர்த்திசெய் இன்னலாயினும்
நல்லெண்ணம் கொண்டான் .....

நாளும் வாழ்வான்..................!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி