சனி, 4 டிசம்பர், 2010

என்றுத் தனியும் ............


பள்ளி பருவம்
பால்ய சிநேகம்
பிஞ்சு முகம்
பீடித் தொழிலில்
புன்னகை பூக்க
வழி இல்லை
பெண்ணிற்க்கு
மணமில்லை
பேரின்ப கனவுமில்லை
ஒருவேளைச் சோற்றுக்கு
போர்களமான
வாழ்க்கைகள்...........

ஆவி பொறியல் சாப்பிட வாங்க


அரைக்கிலோ பீன்சு வாங்கி
காம்பு கிள்ளி நாரெடுத்து
நன்னீரில் குளிக்கவைத்து
சுத்தம்செய்து
அருவாமனை வேண்டாமே
கூரானா கத்திகொண்டு
சின்ன சின்ன துகள் போலே
கடலைபருப்பு அளவினிலே
நறுக்கி வச்சு நாலைந்து
பச்ச மிளாகா அதே அளவில்
நறுக்கிபுட்டு அடுப்பையும்தான்
பத்தவச்சி வானலிய மேலவச்சி
சூடேறிய பிற்பாடு சிறிதளவு
என்னைவிட்டு கடுகு உளுத்தம்
தாளிப்பில் படபடனு சத்தம் வர
நறுக்கி வச்ச பச்ச மிளகா
கூடே போட்டு வதக்கி
கருகாத நேரம் பார்த்து
பீன்ஸையும் சேர்த்து போட்டு
ஒருநிமிடம் வதக்கி விட்டு
அளவான தீதனிலே மேல்மூடி
இட்டு நீராவிதனில் வேகவைக்க
சிறிது நேரம் காத்துநிக்க
பச்சை வாசம் பறந்து போக
மேல்மூடி திறந்து வச்சு
சுவைக்கேற்ப உப்பிட்டு
கிளறி கிளறி சிறிது நேரம்
ஆவியிலே வேகவைத்து
அடுப்பனைத்து கீழியிறக்க
நளபாகம் வேண்டாமே
அரிசி சோற்றுக்கும்
குழம்பேதும் வேண்டாம்
இட்லி தோசை சப்பாத்திக்கும்
துணையேதும் வேண்டாம்
பச்சை மிளகாவிற்க்கு ஏற்ற
காரம் சேர்த்து சமைக்க
அனுதினமும் உண்டாலும்
ஆசை தீராது சும்மா
சமைச்சு பாருங்க.........



டிஸ்கி : நம்பினோர் கெடுவதில்லை என்ன நம்பி சமைக்கலாம் நான் கேரண்டி

டிஸ்கி 1 : சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம் இட்லி , தோசை , சப்பாத்தி இவைகளுடனும் சாப்பிடலாம் டூ இன் ஒன்

டிஸ்கி ௨ : ஹலோ எங்க சாட்டுபுட்டு சும்மா போறீங்க நாங்களும் சாப்புடனும் ஓட்டு போட்டுட்டு போங்க நண்பர்களே

வெள்ளி, 3 டிசம்பர், 2010

அவள்


மல்லிகை வாசம்
மாலை நேரகாற்றும்

மின்மினிகள் பேசும்
மீண்டும் அவளே என்று

முல்லைமலர் கொடியாள்
மூத்தகுடி இளையாள்

மெல்லிசை நடையாள்
மேகக் குடையாள்

மையம் கொண்டு இழுக்க
மொட்டு மலர சிரிப்பால் - எந்தன்
மோகன புன்னகையால்.........

டிஸ்கி : ஆமாம் யார் அவளோ??????

வியாழன், 2 டிசம்பர், 2010

நாங்களும் இப்படிதான் தேடினோம் வேலை


விருந்தொன்ரும் இல்லை
எதிரிருக்கும் சத்திரத்தில்
நடைப்பாதை கடைகளு மில்லை
பகுதி பசியாற..........

நாகரீக நாணயங்கள் இல்லை
விருந்தோம்பல் காண...
பசிதீர வழியுமில்லை - ஆஹா
தெருவோர குழாய் இருக்கு

யாருக்கு மறியாமல்
என் குடலோன்றை
குடமாக்குவேன் இன்று.......
குழாய்க்கும் பசித்ததோ - என்ன
நீர் குடித்து ஏப்பம் விடுகிறதே????...........

புதன், 1 டிசம்பர், 2010

வதம் வரும் வதைக்க............


ரணங்கள் ஆறவில்லை
எங்கள் மனங்களிலே
ரணங்களை ரசித்து
ருசித்தவனல்லவோ நீ

ராட்சத வம்சம் நீயோ
வதம் ஒன்று வரும்
உன் வரவில் வைத்துக்கொள்
உயிர் மட்டும் இருக்கும்

உன் உடம்பெல்லாம் சிதையும்
உன் உயிர் மட்டும் இருக்கும்
கருவறையில் சிசு தின்ற
ராட்சதன் அல்லவோ நீ

ஷத்ரிய வம்சமடா
நாங்கள் மடையனே
வதம் செய்ய வந்துள்ளோம்
உன் உடல் கொய்து

உடலட்ற உயிராக்குவோம்
உன்னை வதம் செய்ய
வந்துள்ளோம் மனிதன்
மாற்றிய மானிதனாய்....

உன் படை சூழ்ந்தாலும்
பிடிக்க முடியா இடம் எனக்கு
மேலுல்லவன் கொடுத்துள்ளான்
உன் உயிர் வாழும் உலகில்

உன் உடல் வாழ சாத்தியமில்லை
பிஞ்சுகளின் நெஞ்சம் துளைத்த
அணுகுண்டு உன்னை துளைக்க
மாட்டேன் என்றது ஏனோ ....

அவை நீ விலைக்கு வாங்கியவையோ
குண்டுகள் வீசி கூண்டோடு
உன்னை அழிக்க நான் என்ன
மானிடம் அறியா நீயாடா சூட்சமா

பட்டறையில் பதப்பட்ட
கரங்கள் இங்கு குண்டு துளைக்கா
நெஞ்சம் படைத்து ஆயுதம்
வடிக்கிறது உயிர் கொல்லா

ஆயுதம் உன் உயிர் கொண்ட
உதிரி உடல் கண்டு
பாடம் புகட்டும் பாவிகளை
ருசிக்க வாராயோ இறைவா

இறைவா நீ படைக்கா
நீதி நீ வரவில்லையெனில்
படைக்கப்படும் உன்
படைப்புகளை மீறி

இனியாவது யோசி
நான் கடவுள் இல்லையென்று
கடவுளே...............

திங்கள், 29 நவம்பர், 2010

"கொய்யப்பட்ட ரோசாவே"



கருப்பாடு களமிறங்கி
களவாடி உறவாடிய
கரைச் சேரா கனவுகண்டு
கரைந்து வாழும் உள்ளமிங்கு

காதலைத்தான் கைக்கழுவ
காதல் செய்த குற்றமிங்கு
கிளிப்பேச்சு கேட்க வந்து
கிழிந்த காகிதம் ஆனேன்

கீழ்வானம் சாட்சி சொல்ல
கீரி ருசித்த பாம்பானேன்
குழந்தையான குணமொன்று
குழைந்து குரோதமானதே

கூவி கொக்கரித்தால்
கூடுமே கூட்டமிங்கு
கெத்தாக ஆண் நிற்க
கெட்டுப்போன பெண்ணாவேன்

கேளாத உலகமிது
கேட்போரும் இச்சையுடன்
கை பிடித்த அரளி விதை
கை கோர்க்கும் கனவுகள் மறைய

கொடும்பாவம் செய்த எம்மை
கொல்லாமல் விடமாட்டேன்
கொடுஞ்சினம் தான் கொக்கறிக்க
கொய்யப்பட்ட ரோசாமலர் - பேச

கோழைத்தனம் வேண்டாமடி
கோபம் கொள்ளக் கூடாதடி
கோகுலத்தின் ராதைக் கூட சீதைதானடி
கோரைப் புல்லாய் நிமிர்

கௌரவம் தான் வாழ்க்கையென்றால்
கௌரவிக்க எவரும் இலர் இப்புவிதனிலே
கௌரவிக்க வாழ்வேனடி-சிசுவை
கௌரவிக்க வாழ்வேனடி...............

டிஸ்கி : பாதிக்கப்பட்ட ஒரு மங்கையின் நிலையிலிருந்து நான் எழுதிய வரிகள் தவறிருந்தால் இம் மா பாவியை மன்னித்தருள வேண்டும் தாய்குலமே

கூத்தாடும் தெருக்கூத்து

ஆயிரம் ஆயிரம் கதைச்
சொல்லுவார் ஆனந்தம்
இதுவென கண்டுகளித்தோம்
தெருவோர நாயகனாய்
நினைவில் நிற்பார்

தை தோம் தை யென
சங்கீதம் முழங்க
ஆட வந்தவன் நானே
எனை ஆட்டுவிப்பவன்
நீயே....
சலங்கை யோலிதனை
கலங்கமிலாமல்
காற்றுக்கு இசையாக்குவார்
வேறோனே.......
ஓரிரவில் சரித்திரம்
முடிக்கும்
சாம்பவான்கள்
இவராவர்.......
சாதி மதமின்றி
அன்று அனைவரும்
கண்டுகளித்த
கதாநாயகர்கள்
எத்துனையோ.........
பெயரறிவோமா இன்று
பெருந்தவறு செய்துவிட்டோம்
என்று நினைக்கிறேன்
நாகரீகம் வளர்ந்து
நாடக கலையும் வளர்ந்து
இன்றும் கூழுக்காக
கூத்தாடுவோர் வற்றிய
வறுமையில்
கலைமரவாது.........

வந்தேன் வந்தேனே
உனை
வாழவைக்கும் தெய்வம்
நானே...........
தொடரும் இருளில்
தீச்சுடரான வாழ்க்கைகள்...........
டிஸ்கி 1 : சமயம் இல்லாத காரணத்தால் மீண்டும் ஒரு மீள்பதிவு நண்பர்களே

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி