புதன், 25 ஆகஸ்ட், 2010

என்னைப்பற்றி சில வரிகள் 5

அடுத்த ஆறு மாத கால இடைவெளியில் தேர்வெழுதும்போது முதல்வகுப்பு தர முயற்ச்சிசெய்து முடிவெடுக்கிறோம்...... அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது என் கவனம் தேர்வுகால அட்டவணை பக்கம் சென்றது அவர்கள் எடுக்கும் முடிவில் நாட்டமில்லாமல் யார் செய்த தவறுக்கு யார் தண்டனை பெருவது, அட்டவணையை நோக்க அங்கிருந்து விலகி யாருக்கும் அறியாமல் நகர்ந்தேன் அங்கு செயமுறைத்தேர்வின் அட்டவணை அறிவிப்பு பலகையில் இருந்து கிழிக்கப்பட்டிருந்தது தடயங்களை அழிக்க நினைத்து கிழித்திருக்கிறார்கள் அவசரமாக அத்தேர்வின் பெயரும் தேதியையும் விட்டு
அங்கிருந்து விடுதிக்குள் ஓடினேன் நண்பன் ஒருவனின் புகைப்படக்கருவி கொண்டுவந்து அத்தடயத்தை புகைப்படம் எடுத்தேன். பின்பு யாருக்கும் அறியாததுப்போல நிர்வாக கூட்டம் நடக்குமிடத்திற்கு சென்றேன் அங்கு கல்லுரி முதல்வர் மாணவர்கள் கைப்பட எழுதிய மன்னிப்பு கடிதத்தை சென்னையில் உள்ள BOARD OF TECHNICAL EDUCATION-TAMILNADU அனைவரும் அங்கு சென்று உயர் தலைவரிடம் அவரிடம் கொடுத்து மன்னிப்பு கேட்டு நாங்கள் இனி இம்மாதிரியான தவறுகள் செய்யமாட்டோம் எங்களை மீண்டும் தேர்வெழுத சிபாரிசு செய்யுமாறு கேட்க்கச்சொனார்கள் வரும் ஏப்ரல்-15-2002 திங்கட்கிழைமையன்று...
எனக்கு விருப்பம் இல்லாமல் வெளியே சென்றேன் வெகுதொலைவில் ஒரு ஆட்டோ வருவது தெரிந்தது என்னை நெருங்கிவந்தது ஆட்டோவில் இருந்து இறங்கிய நபர்கள் என்னை நோக்கி வந்தனர்........

வந்தது யாரோ
வழித்தவறி வந்தவரோ
வழி நடத்த வந்தவரோ.....
யார் யார் யார் அது யாரோ...........

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

என்னைப்பற்றி சில வரிகள் 4

மன்னிக்கவும் நண்பர்களே தொழிற்பணி அதிகம் இரவுவேலை செல்வதால் குறைய தாமதம்
சரி கல்லூரிக்கு வருவோம்......

ஒருத்தரும் இல்லாத அறையில் மூச்சு காற்றா வரும் தென்றல் காற்றுதான் வரும்.
பறக்கும்படை தேர்வாலர்கட்கு பதில் சொல்ல இயலாத கல்லுரி நிர்வாகம் தட்டுத்தடுமாறி விடுதிக்குள் ஓடியது அங்கு இருந்த ஒன்பது மாணவர்களை அவரிருந்த நிலையிலே பலவந்தபடுத்தி தேர்வரைக்கு கொண்டுவந்தது கண்கள் கட்டப்பட்டது நிர்வாக காரியமும் முடிந்தது
கல்லூரிக்கு அரைமணி நேரத்தில் வந்து சேர்ந்தேன் மாணவர் கூடியிருந்தனர் கல்லூரிக்கு வெளியே ஒவ்வொருவர் கண்ணிலும் சொல்லமுடியாத சோகம் அனைவரையும் அழைத்துகொண்டு கல்லுரிவலாகத்தினுள் நுழைந்தோம் நிர்வாகிகள் கூட்டு சேர்ந்து கூடியிருன்தனர் நடந்ததைக்கூறி நாயத்தை கேட்டோம் அங்கிருந்து வந்த வார்த்தைகளோ தேர்வு முடிந்து விட்டது இனி உங்களுக்கு இரண்டாம் வகுப்பு கிடைக்கும் அடுத்த ஆறுமாத இடைவெளியில் நீங்கள் தேர்வேழுதலாம் என்ற பதில்கள் மட்டும் கோவம் தலைக்கேறியது இது நம் வாழ்க்கை மட்டுமல்ல மற்றவறையும் நோக்க வேண்டுமென்று மனது கூறியது............
நிலை தடுமாறி வெளியே சென்றோம் அங்கு சில மாணவர்கள் சாலைமறியல் செய்ய முடிவுசெய்து அரங்கேற துவங்கியது. அனைவரையும் தடுத்தோம் நானும் விடுதி மாணவர்களும் சேர்ந்து. இச்செய்தி பக்கத்து கிராமத்திற்க்கு பரவி மக்கள் ஒன்று திரண்டு வந்தனர் எங்களையும் அழைத்துக்கொண்டு நிர்வாகத்திடம் சென்றோம் ஊர்மக்களுக்கு பயந்த கபட நாடக நிர்வாகம் மாணவர்களை தேர்வை தவற விட்டது தங்கள் தவறே என்று மன்னிப்பு கடிதம் எழுதிகொடுக்குமாரு ஒவ்வொருவர் கைப்பட அங்கனம் செய்தால் அடுத்த ஆறு மாத கால இடைவெளியில் தேர்வெழுதும்போது முதல்வகுப்பு தர முயற்ச்சிசெய்து முடிவெடுக்கிறோம்......

இடைவெளி நீடித்ததா
இடை இடையிடையே
இடர்வுகள் தகர்ந்தனவா..............

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

என்னைப்பற்றி சில வரிகள் 3

ஏப்ரல்-12-2002
சரியாக முற்பகல் 11:30 மணி தொலைபேசி அழைத்தது வீட்டில் தொலைபேசியை எடுத்தேன் மறுமுனையில் அழுகுரல் என் கல்லூரித் நண்பனின் குரல்தான் அது நான் சுதாரிடத்துக்கொண்டு அவனை என்ன என்ன விஷயம் சொல்லடா என்று பதட்டமான குரலில் கூறினேன் மறுமுனையில் நண்பன் நாளை நடக்கவிருந்த தேர்வு இன்று முடிந்துவிட்டது என்னச்செய்வது என்று புரியவில்லை என்றுகூறி மேலும் நண்பனின் அழுகுரல் மேலோங்கியது அவனை சாந்தப்படுத்தி கல்லுரிவலாகத்திலே இருக்குமாறு கூறி நான் என் பெற்றோரிடம் நடந்ததை கூறிவிட்டு வீட்டிலிருந்து கல்லூரிக்கு புறப்பட்டேன்.................

ஏப்ரல்-12-2002
காலை 10:00 கல்லுரிவளாகம் அனைத்துப் பிரிவினரும் தேர்வுஎழுதிக் கொண்டிருக்கிறார்கள் அந்நேரம் பறக்கும்படை கல்லுரிவளாகத்தினுள் நுழைந்தது எல்லா தேர்வு அறைகளையும் நோட்டமிட்டுக்கொண்டு வருகிறது இயந்திரவியல் துறையின் தேர்வு அறையை நோக்கும்போது ஒரு மயான அமைதி நிசப்த்தம் அறை முழுவதும் அமைதி நிலவி இருந்தது என்ன தேர்வு என்றாளே அமைதியாத்தான் அறை இருக்கும்னு சொல்ல்வரிங்கஅதானே.............
மூச்சுக்காற்று விடும் சப்தம் கூட இல்லீங்க.............
காற்று வந்ததா
கறை கடந்ததா
மூச்சு நின்றதா
மூழ்கிப் போனதா.............

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

என்னைப்பற்றி சில வரிகள் 2

ஏப்ரல் 12-20௦2
அன்று என்வாழ்வில் மறக்கமுடியாத சம்பவமொன்று அரங்கேறியது நான் தனியார் கல்லூரியொன்றில் டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பிரிவில் இறுதியாண்டு மாணவன் கல்லூரிக்கும் எனது சொந்த ஊருக்கும் 15kmtr தொலைவுதான் தினமும் பேருந்தில் வந்துப்போவது வழக்கம் அதேபோல் தேர்வு நேரங்களில் கல்லுரி விடுதியில் தங்கி படிப்பது வழக்கம் எல்லா செமஸ்டர் தேர்வுகளைப் போல் இறுதியாண்டு தேர்வும் ஒவ்வொன்றாக நல்விதமாக முடிந்தது ஒரு தேர்வுதவிர அத்தேர்வு எழுத்து செய்முறை தேர்வு (written practical) கல்லுரிவளாக கால அட்டவணைப்படி தேர்வுநாள் 13-ஏப்ரல்-2002 ஆனால் தேர்வாணையம் அறிவித்த கால அட்டவணைப்படி தேர்வுநாள் 12-ஏப்ரல்-2002.... மாணவர்களாகிய எங்களுக்கு காத்திருந்தது ஒரு சவுக்கடி 12ம் தேதி காலையில் விடுதியில் காலைவேலைகளை முடித்துவிட்டு மறுதினம் தேர்விருக்கிறது ஆதலால் நான் சக நான்பர்களிடம் கூறிவிட்டு காலை 9.00மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டேன் இரவு வந்துவிடுகிறேன் என்று
இரவு வந்ததா
நிலவு வந்ததா
பொழுது சாய்ந்ததா
பொய்கை விடிந்ததா.............
விடியும் விரைவாக..............

என்னைப்பற்றி சில வரிகள்

எவை பற்றியும் கவலைபடமாட்டேன் துணிச்சலாக எவரோடும் பேசுவேன் நியாயமிருந்தால்
யாருக்காகவும் அது அம்மாவிற்கு பயமாக மாறியது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அம்மாவை பிரிந்ததே இல்லை. நான் ஊர் விவகாரங்களில் தலையிடுவது அம்மாவிற்கு பிடிக்கவில்லை வெளிஊர்ல வேலை தேடச்சொன்னார்கள் என்னடா நாம படிச்ச படிப்புக்கு உள்ளூரிலே வேலை தரமருக்குறாங்க இப்ப வெளிவுரிலா கம்பனி கமபனியா
தேடியலைந்து அலைகழிக்கப்பட்டு எட்டு வருடமாய் பல கம்பனிகள் எனக்கு கீழுள்ள வேலையாட்களாகட்டும் மேலதிகாரியாகட்டும் தப்புன்னா தட்டி கேட்டுருவேன் அதுக்கப்புறம் என்ன வேற கம்பனிதான் இந்த எட்டு வருசத்துல பதினைந்து கம்பனினா பார்த்துக்கோங்க.
இந்த எட்டு வருடமும் தனிமையே என் வழ்கையாச்சு தினமும் ஒருமுறையேனும் அம்மாவிற்கு போன் செய்து பேசினால்தான் தூக்கமே வரும் இப்படியே தனிமைலத்தான் என் வாழ்க்கையே ஓடிட்டிருக்கு இப்பவும். ஆனா என் வாழ்க்கைல நிறைய சுவாரஸ்யமான சூடான சம்பவங்கள் நடந்திருக்கு அச்சம்பவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாமா.............

விடை கொடுத்தல் விவரிப்பேன் என் சுயவிவரத்தை................

சனி, 21 ஆகஸ்ட், 2010

நாயகன்

நனைத்து துவைத்துப்பார் மனதை
நானும் நாளைய நாணய மனிதன் என்று
நினைத்து ரசித்துப்பார் வாழ்வை
நீயும் நாயகன்தான்
நுரைத்து குடித்துப்பார் மதுவை
நூற்றில் ஒருவனாவாய் நீ
நெஞ்சம் நிமிர்ந்து எதித்துப்பார்
நேர்மையுள்ள மனிதனாவாய்
நைந்து கேட்டுப்பார் இயலாது
நொறுக்கி யடித்துப்பார் அரசியலை
நோட்டம் எல்லாம் உன்மீதே...........

துணை

எவையும் எதிர்பாராமல்
எதிர்கொள்ளும் குணமுடையாளோ
விண்மீன்கள் வியத்திடும்
முத்துச்சிதறல் புன்னகை யுடையாளோ
கார்மேகம் கவர்ந்திடும்
கருங்கூந்த லுடையாளோ
முல்லைக்கொடி திகைத்திடும்
கொடியிடை யுடையாளோ
சூரியன் விழிக்கும்முன்
தான் விழித்து
மழைச்சாரல் குடைபிடிக்க
மல்லிகைச் சரம்தொடுத்து
மாலையிட வருவாளோ
இம்மன்னனின் துணையாக.............

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி