செவ்வாய், 31 டிசம்பர், 2013

வாழ்த்தி வணங்கும் பொழுது...!


என்னெண்ணம் வர்ணம் குழைத்து எழுதி
நிறப்ப வழிதனை வாழ்த்தி வணங்கும்
பொழுதினைப் போல் வந்துபோகும் யாவும்
பதறாது ஏற்றுக்கொள் வாழ்வு சிறக்கும் ...

வயகாட்டு வேலியெல்லாம் ஆளும் பயங்காட்டும்
வாக்கபட்ட சோலையெல்லாம் வாழ்த்தும் - ஆசை
வழிகாட்ட வாழ்க்கை நெறியுணர்த்தும் தோரணம்
வறுமை நிறங்காட்டும் ஆறறிவர்...

மேய்த்து பார்த்தான் மேய்ப்பன் மெய்யை
மெய்யாய் பொய்யின் புன்னிய அலங்காரம்
புலப்பட பெருந்தியாகம் போர்த்தி பெருகிடும்
தீயுள் வேள்விதனை வார்த்தான் ...

உள்ளவனைக் காண்பதும் உள்ளிலா தவனை 
காண்பதும் நேர்படும் நிலைக்கேற்ப வேறுபட
தன்னிலை கோர்க்கும் அருந்தேன் மருந்தாய்
வருந்தும் வதன மாற்றமே யுனைசாரும்...

கரையா மனதே கரையும் தொடத்தொட
நீளும் தொடராய் படரும் முல்லைக்கு
பாக்யம் சரமேறி கார்குழல் கூட்டில்
குடியாவ தன்று ஒருநாளே...

திங்கள், 30 டிசம்பர், 2013

புதிராகும் பூக்கள்...!


ஆண்டு கடந்ததோ ஆண்டவன் பாக்யவான்
மாண்டு கடந்ததோர் கூட்டமே மக்களெனும்
பக்குவம் யாரறிவர் குட்டகுட்ட குனிந்தே
பிறக்கிறது ஏழ்மை விடியல்...

ஆறடி தானெங்கும் மெய்யே அறியாது
ஆள்வது பொய்யே புரியாத பூவுக்குள்
பூகம்பம் உண்டே உணரா ஊழ்வினை
தாக்குவ தர்மமென நில்லும் நிழல்...

உதிப்பது உனக்கென புலம்பாது ஆர்பரிக்க
விதிபதப் பயனது பிதற்றாது அர்பனிக்க
மதிசுடும் கனமது அதர்ம விற்பதம்
கதிதொடும் கரணமே தருணம்...

வாக்கபட்டு சீர்அமைய நாமதிக்கும் வாக்கிய
வார்த்தைகட்டு உள்ளின் உடையென ஈர்க்கும்
வழிதனில் வார்ப்புகள் வெட்டவெட்ட கோர்வை
கிளையாகும் ஞானக் கலையாதல் அழகு...

ஆடுவ தாடும் படியாடும் கூடும்
குடியாடும் பாடும் படியும் யாதும்
குறையா வதுமேது தீதும் நிறை
காண்ப தரிதென தீரும்...

செவ்வாய், 19 நவம்பர், 2013

வேடம் இனி எனக்கெதற்க்கு ,,,,


 
கட்டி வைத்த கூட்டுக்குள்ளே
கட்டவிழ்த்து பறந்ததடி நித்தம்
பொங்கும் பானைப் போலே
நினைவில் அலைகள் கூடுதடி
சத்தம் போடா யுத்தம் ஒன்று
அந்தி சாய வந்தமரும்
பக்குவமாய் வாக்குப்பட
வாத்தியக் கட்டு வேண்டாமடி
கூட்டுக்குள்ளே குருவிச் சத்தம்
குறுகுறுக்க செய்யுதடி வேடம்
இனி எனக்கெதற்க்கு வேர்வை
தங்கும் மேனியடி கானி நிலம்
காணும் கனா களையாது
காத்திருக்கு கானகத்தே
கரைத்தட்டி பாட்டன் சொத்து
பகிர்ந்த தற்க்கு வீட்டு முக்கில்
விரிசலடி சோறு திண்ணு
நாளாச்சு சோலைகுயிலே
நீ ஓடி வா அருகே....

திங்கள், 14 அக்டோபர், 2013

அதிகார அத்தியாயம் இன்றே பிறக்கட்டும் .....!


அற்றதிரு என்னில் அடைக்கலம் ஆகிநிற்க்கும்
உற்றதிரு உன்னில் அடக்கிடல் ஆகுமாயின்
வெற்றுத் திருவுடலின் வற்றல் தகுமாயின்
தாகம் புகும் தரணியையார் ஆள்வது

பற்றதிரு தீமூட்டி மற்ற தறும்மகிழ
நெற்றிதிரு செங்கமழ் நீர்தொட்டு எனை
அற்றதிரு ஆடவனாய் விற்றடக்கி வீருகொள்
கொற்றவளே கோலமிடு கோர்வையாய்

கோவை கடந்தறிய கொய்யா சுவையறிய
பாவை படர்ந்தொளிர பாமரனாய் பவ்யமாய்
பார்கடலான் பார்வையுனை ஆட்கொள்ள ஆகும்
அதிகார அத்தியாயம் இன்றே பிறக்கட்டும் .....

புதன், 31 ஜூலை, 2013

4.பித்தனின் சமையல்


16.நிறையாகும் திரை நில்ல பிறையாகும்
வல்லன் முறையாகும் வஞ்சம் திகழாரம்
கொஞ்சும் இதழ்பாடும் கோள கடிகாரம்
நின்றாடி என்று நிலைபாடும்....

17.எத்தனிக்கும் போதெலாம் தத்தளிக்க எனை
விடுவான் ஏன் பரஞ்சோதி யாய்படை பாரேன்
நினைவுகள் அங்குமிங்கும் முன்னோடி எந்தன்
நிலையாடை பார்க்க பறந்து விரிகிறது....

18.மீண்டும் உயிர்த்த நினைவுகள் நீண்டதொரு 
காவியம் சிந்தையுள் ஆழ்த்த அமர்ந்தேன்
தேரினிலே ஏகாந்த புன்னகை வேடத்தின்
ஆளுமை பாவித்த வீதிசென்றேன்....

19.இயக்க இசைந்ததும் நீயே உன்னில் 
அசைந்திடும் நாதம் கவர்ந்திடும் வேதம்
கருவே உருவாய் கருணை தருவாய்
கடனே அடைய அகிலமெலாம் ஆர்பரிக்காய்....

20.எங்கழைப்பான் யேது உரைப்பான் யாரறியா
வேதம் உனைசமர்த்த பங்கமுனில் பங்கிடா
பாக்கியஞ்செய் அங்கமிடும் வேடம் குடந்தங்க
உள்ளுருவன் கூடில் அடையாது மெய்சறுக்கும்...

ஞாயிறு, 14 ஜூலை, 2013

3.பித்தனின் சமையல்


11.சூதாட சூட்சுமம் வாதடி வந்தது
சூழலின் சூடும் சுடுமென் றறியாது
வாதத்தின் வாட்டம் உருமாறி உள்ளில்
கருவேரிட வேற்றுடல் தாண்டியும் காணேன்...

12.நில்லாது ஓடிடும் வெண்ணிலவின் பூரணம்
காண கடைக்கண் சிமிட்டி கருவிருள்
தாண்டி எனைத்தொட்டு தாலாட்டி செல்லமாய்
வின்னில் உலாவரும் உன்னதம் காணே...

13.என்னில் அறியாது எனை மீட்டும்
முருகா என்சொல் எடுப்பினும் அச்சொல்
அழகுடுத்தி ஆழ்ந்து வரும் துணையே
தமிழ்குமரா உன்னடி பனிந்தேன் பவணிவா...

14.மனக்கும் மருதமல்லி யேயுந்தன் சந்தமெனை
வாட்டுதடி மந்தம் பிடித்தலைய மாற்றுதினை
போற்றுதுனை மேற்க்கரையை கார்க்குவிய தேற்றும்
நரனல்லோ நான் எனக்கணிய யேதும்தா...

15.நானொரு குரல் பாவை நடனனின்
அருள் பாவை மழலையாய் அழும்
பாரேன் தகித்திடும் தாகம் தனியே
தினந்தோறும் ஓதும்வே தம்புதிதே...

திங்கள், 8 ஜூலை, 2013

2.பித்தனின் சமையல்


6.காட்டி மறைநின்றான் ஏட்டினில் கூறுவ
கேளும் கிடைக்கனலான் காட்டி நிறைச்செரியும்
கட்டுவன் கோட்டையுள் காணாது கிட்டுவன்
காட்டி உனைவடியும் பேராழி உள்ளேயுகம்..

7.முத்தெடுத்தான் முத்தெடுத்தான் மூழ்குதலை தத்தெடுத்தான்
தத்துவம்போல் கட்டிவைத்தான் கொட்டியவை தாம்தம்
அறிய தமக்குரிமை யாதெனவே குட்டுவைத்தான்
கொட்டியவன் தத்தெடுத்த பிள்ளையானை..

8.சத்திரத்து வீதியிலே சங்கமிக்கும் சூழலிலே
வாழியென வந்தால் மழைமுத்து மாரியெனை
வாரிஅணைத் துக்கொண்டால் தேரினில் வேந்தனைப்
போல்திகழ பாடல் பொழியேன் இன்று...

9.பட்டி யிலடைத்தான் பட்டான் படியமுதம்
புட்டி யிலடைத்து விட்டான் பிடியமுதம்
பக்தி யிலடைத்து தொட்டான் முழுஅமுதும்
புத்தி யிலடைத்தால் கிட்டும்...

10.அழகந்தி சிற்பம் அழகேந்தும் ஆலிலை
நீளா நிலையாகி மீண்டுவரும் நாளை
மிகையாகும் பார்வை தொடருந் துனிவு
படரப் பழிதங்கி பார்கடவும்...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி