சனி, 1 நவம்பர், 2014

கயவனாம் உள்ளம்...!


கயவனாம் உள்ளம் நினைவது யாவும்
நடவது போலே திரித்து நிகழ்வாய்
நிறைத்து நிலை கொள்ள அழகுதான்
ஆகினும் மெல்ல கனவுகள் காக்கும்

சன்னதி பொய்யென சங்கதி சொல்லும்
சரங்கோர்த்து சம்பவம் கொள்ள சகலம்
உடையா ருணரும் சுடரை புவனமாய்
சித்தரிக்கும் சத்திரமாய் மனம்

இருக்கு மிடம்விட்டு இல்லாத இடம்தேடி
ஈர்க்கும் அவனை செயலிடம் மெய்க்கும் 
மகிமை பொருந்திய தேடலே தாகம்
தரையிறங்க தேகம் நிலையதுவோ 

என்னில் எதுவோ இயற்றும் இனிமையென்
உள்ளில் மெதுவாய் கழற்றும் தனிமையென்
கண்ணில் உருவாய் உயிர்க்கும் கருமேகம்
எண்ணி லடங்கா உதிர்க்கும் துளியே

சாரல் நனைத்த சகிதம் கனவோடு
காண்ப கடந்தாடும் காயம் சமமாகும்
வேகம் பிடிபடா தேகம் நதியாடும்
சொந்தவனம் தேடும் மனம் 



2 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

//இருக்கு மிடம்விட்டு இல்லாத இடம்தேடி
ஈர்க்கும் அவனை செயலிடம் மெய்க்கும்
மகிமை பொருந்திய தேடலே தாகம்
தரையிறங்க தேகம் நிலையதுவோ //

அருமையான கவிதை....
வாழ்த்துக்கள் தினேஷ்.

Yarlpavanan சொன்னது…

சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி