புதன், 11 ஜூலை, 2012

விடிவா...? முடிவா...?


விடிக இருளே விடிவா முடிவா 
இளகிடச் சொல்லிடு வல்லவன் தேரினில்
சார்வ தாள்வதும் சாரத்தி லாழ்வதும் 
கூடில்லா சூழும் சுமை..

இனிதும் இயல்பாய் கனிந்து விடிய
இனமெனும் சூழலி னாட்சி கரையறுக்க
ஈரத் துளிகள் இமையோடு வாட
உணர்வ தறியா கனல்....


கபடநாடி காலத்தே காணு மியந்திரச்
சங்கத் திலாடு மகமே யுணர்வாய்
கனவிடிய காலைக் கதிரு மெதிரே
தருண முதிர்க்கும் மலர்....

முற்று வதறிந்தே கற்றெதிர் தீண்டும்
சுடுங்காற் றினிலாட விட்டாய் இயலா
இனமானேன் தள்ளாடி தப்பிப் பிழைக்க
தானே மருந்தா னேன் ..


நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி