விடிக இருளே விடிவா முடிவா
இளகிடச் சொல்லிடு வல்லவன் தேரினில்
சார்வ தாள்வதும் சாரத்தி லாழ்வதும்
கூடில்லா சூழும் சுமை..
இளகிடச் சொல்லிடு வல்லவன் தேரினில்
சார்வ தாள்வதும் சாரத்தி லாழ்வதும்
கூடில்லா சூழும் சுமை..
இனமெனும் சூழலி னாட்சி கரையறுக்க
ஈரத் துளிகள் இமையோடு வாட
உணர்வ தறியா கனல்....
கபடநாடி காலத்தே காணு மியந்திரச்
சங்கத் திலாடு மகமே யுணர்வாய்
கனவிடிய காலைக் கதிரு மெதிரே
தருண முதிர்க்கும் மலர்....
சங்கத் திலாடு மகமே யுணர்வாய்
கனவிடிய காலைக் கதிரு மெதிரே
தருண முதிர்க்கும் மலர்....
முற்று வதறிந்தே கற்றெதிர் தீண்டும்
சுடுங்காற் றினிலாட விட்டாய் இயலா
இனமானேன் தள்ளாடி தப்பிப் பிழைக்க
தானே மருந்தா னேன் ..
சுடுங்காற் றினிலாட விட்டாய் இயலா
இனமானேன் தள்ளாடி தப்பிப் பிழைக்க
தானே மருந்தா னேன் ..