வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011
அந்தரத்தோணியில்.....!
காணா கருவிழியானோ தானே நகலுருவோனோ
சாரம் சலங்கையின் சகனெனும் நகமரியோனே
தாகத் தரணியில் வேகத் தடையெனும்
நாத நடனுருவே சரணம்..
சுயமெனுமுகமெரி சுகமெனுமுகமறி
பிறவணி சூடும் மகத்துவ மாலை
சரீரக் கூடு சமைத்துடன் கோரு
சகதிகளற்ற சாதகமாகு..
சங்கதிக்கேளேன் சரீரமானேன்
சகலமும் இழக்க சடலமுமானேன்
அகிலமும் விரட்ட அந்தரத்தோணியில்
நர்தனமாடிய நான் யார் .....?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
அருமையான படைப்பு
தேர்ந்தெடுத்துக் கோர்த்த
மணிமணியான வார்த்தைகள்
மன உணர்வை மிகச் சரியாக
படிப்பவருக்கும் கடத்தும் சொல்லாட்சி
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அழகான கவிதை..
கருத்துரையிடுக