வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

சுத்தச் சுடரே....


சத்திரத்து அமர்ந்த சித்திரமோ சித்திரையில்
வெற்றி டத்து நகைத்த மச்சினமோ
பற்றவை மிளிரும் சுத்தச் சுடரே
அற்றவை துறந்த மனமே

இழைதளிர் கூடில்லா இமைநீர் சாடும்
சொப்பன சுவர்க்கம் யுனைச் சமர்த்தும்
நரைதறிக்கும் நகநரகண்கள் விளைந்தகரும்
வளமின்றி வரமருகும்

கொடியுடை மல்லி நடையிடை சூடா
நறுமணம் மாளும் மரமெறிக் கல்
மடிவீழ்க் கனி அள்ளிக்கொடுத்தான்
கிள்ளியடுக்க மாறுமது

கலியுகம் : ஆசைகள் துறந்த மனமதின் பிரகாசம் வின்மீனுக்கீடாகும். மனம் பயணிக்கும் வழியோடையில் அகற்றப்பட வேண்டிய சில தடைகற்கள்

19 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

///ஆசைகள் துறந்த மனமதின் பிரகாசம் வின்மீனுக்கீடாகும். மனம் பயணிக்கும் வழியோடையில் அகற்றப்பட வேண்டிய சில தடைகற்கள////////

உண்மையான வரிகள் கவிதை சூப்பர்..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

என்ன தினேஷ் ? பதிவு நேரம் மாறுது? வழக்கமா காலைல அல்லது நைட்தானே போடுவீங்க?

எஸ்.கே சொன்னது…

//கொடியுடை மல்லி நடையிடை சூடா
நறுமணம் மாளும் மரமெறிக் கல்
மடிவீழ்க் கனி அள்ளிக்கொடுத்தான்
கிள்ளியடுக்க மாறுமது//

அந்த வார்த்தை பிரயோகம் எல்லாம் செம சூப்பரா இருக்குங்க!

karthikkumar சொன்னது…

எல்லா கவிதையிலும் உங்கள் வார்த்தை பிரயோகம் வியக்க வைக்கிறது பங்கு.........:)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நல்லாருக்கு தினேஷ்...........

'பரிவை' சே.குமார் சொன்னது…

வார்த்தை பிரயோகம் எல்லாம் சூப்பரா இருக்கு.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//ஆசைகள் துறந்த மனமதின் பிரகாசம் வின்மீனுக்கீடாகும். மனம் பயணிக்கும் வழியோடையில் அகற்றப்பட வேண்டிய சில தடைகற்கள்//

இது மட்டும் நல்லா புரிஞ்சிடிச்சி ஹா ஹா ஹா ஹா...........

சமுத்ரா சொன்னது…

what is the meaning

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் said...
என்ன தினேஷ் ? பதிவு நேரம் மாறுது? வழக்கமா காலைல அல்லது நைட்தானே போடுவீங்க?//


என்கிட்டே வந்துட்டாருல்ல ஹா ஹா ஹா இனி அப்பிடிதான் ஹி ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வார்த்தை பிரயோகம் வார்த்தை பிரயோகம்ன்னு கமெண்ட்ஸ் போடுறாங்க,
யாராவது அர்த்தத்தை சொல்லுங்கைய்யா....
சத்தியமா நான் "ங்கே"..............

Unknown சொன்னது…

வர வர ரொம்ப இலக்கிய நயமா எழுத ஆரம்பிச்சுட்டதால, ரொம்ப கலக்கமா இருக்குங்க...

ருத்ரன் சொன்னது…

அருமையாக உள்ளது...........

Chitra சொன்னது…

அற்புதம்!

வைகை சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...
வார்த்தை பிரயோகம் வார்த்தை பிரயோகம்ன்னு கமெண்ட்ஸ் போடுறாங்க,
யாராவது அர்த்தத்தை சொல்லுங்கைய்யா....
சத்தியமா நான் "ங்கே".............///


கேக்குறாருல்ல...யாராவது சொல்லுங்கப்பா?....ஹி ஹி....சேம் பிளட்...

vanathy சொன்னது…

Wow! super.

Unknown சொன்னது…

நல்கவிதை..

Unknown சொன்னது…

நல்ல இருக்குங்க கவித

Thoduvanam சொன்னது…

கவிதை நடையும்,ஓட்டமும் மிக அருமை.மெருகு கூடி மிளிர்கிறது.
வாழ்த்துக்கள்.....

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி