ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

"அபலை 'அந்தம்'..."


மா ரணம் ஆரா தூர்வனம்
பருவ மழையும் அறியா பிழையா
ஆனந்த ஈர்ப்பில் மறவா நனைந்து
பிறவா பிறப்பு பிரிதோர் உயிரில்

பெற்ற பிள்ளை நாடுமது தென்றல்
ஆளுமை அடங்கும் குளிரில் தகிக்க
ஏட்டில டங்கா ஓவியம் எழுதா
இலக்கண மடங்கும் காவியம்

பட்டி அடைத்தான் புழுதியி லமர்ந்து
பூர்வ துணையாம் புகலும் இடமது
புண்ணியம் கிட்டா நிலையும்
ஏற்க மறுக்கும் நோன்பேனோ

பால்யத் தொடரில் தொடர் பில்லா
தொடரும் பக்குவபட்ட நீ பகையாகி
உதிர்க்கும் சொல்பட்ட சினம் மேற்கூரை
கயிற்றை நோக்கிப் பயணம்.

கண் முன்னே ஓடுதம்மா,- உன்
மழலை முகம் கடந்தவாரம் வந்த
செய்தியில் கலங்கிப் போனேனம்மா...
நீ கடவுளிடம் சென்றதறிந்து....(?!)

கலியுகம் : கடந்த வாரம் எந்தன் ஊரில் ஒரு சிறுமியின் தற்கொலை செய்தி அறிந்தேன் அவளைக்கொன்றது காதலா பெற்றோரா என போராடிக்கொண்டிருக்கிறது என் மனது அச்சிறுமியின் முகம் இன்னும் சிரிப்பலைகளுடன் புத்தக பைச்சுமந்து சென்றுக்கொண்டிருக்கிறது ஏன் இந்த அவலம் இன்னும் தீரவில்லை நண்பர்களே ... அறியா பிள்ளைக்கு பக்குவமாக புரியவைப்பதை விட பெற்றோரின் கடமை என்ன இருக்கிறது அதைவிட்டு மிரட்டி மிரட்டி மீண்டுவிட்ட பொழுது அழுதென்ன பயன்

18 கருத்துகள்:

மோகன்ஜி சொன்னது…

படிக்க மனம் கனத்துப் போயிற்று. அச்சிறுமியின் ஆத்மசாந்திக்கு ஏன் பிரார்த்தனைகள்

Sivakumar சொன்னது…

>>> >>> நெஞ்சு பொறுக்குதில்லையே!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கவிதை இப்போ நல்லா புரியுது......
ஐயோ இதயம் கனக்கிறதே......

சிவகுமாரன் சொன்னது…

இதயம் கனக்கிறது.
இப்படி தினம் தினம் நடந்து கொண்டுதானிருக்கிறது
நம் நாட்டில்.
கல்லாமையும் ஏழ்மையும் தான்
காரணம் இதற்கு..
வேறென்ன சொல்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அடக்கடவுளே..... என்ன இது? அறியா சிறுவர்களை சீரழிப்பதில், சினிமாவும் மீடியாக்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. சமூக பிரக்ஞை இல்லாமல், எதையும் பொருட்படுத்தாமல் எங்கே போய்கொண்டிருக்கிறோம்...?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சாரி தினேஷ், சில நாட்களாக இரவு நேரங்களில் இண்டர்னெட் பக்கம் அடிக்கடி வரமுடியவில்லை, அப்படி வந்தாலும் ட்விட்டர் பக்கமே போய்விடுகின்றேன்...

Philosophy Prabhakaran சொன்னது…

மீண்டு வரமுடியவில்லை,...

Chitra சொன்னது…

அதிர்ந்து தான் போனேன்.... மனதில் ஒரு வலி!

'பரிவை' சே.குமார் சொன்னது…

vali niraintha varikal.
ithupol eththanai irappukkal nanba...
eppo vidivu?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவிதை நல்ல்லாருக்கு தினேஷ்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

வலி

arasan சொன்னது…

படிக்கும் போதே வலிக்க செய்கிறது

vanathy சொன்னது…

very touching. nice.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

படிக்கும் போது மனம் கனக்கின்றது...

செல்வா சொன்னது…

ரொம்ப கொடுமை அண்ணா ..

ஹேமா சொன்னது…

தினேஸ் உங்களுடன் தமிழ்த்தாய் உண்டு உறங்குகிறாள்போலும் !

நிகழ்வுக்காக மனம் இரங்குகிறது !

Meena சொன்னது…

கவிதை நன்றாக உள்ளது

பெயரில்லா சொன்னது…

This website may be the top rated world-wide-web real estate asset.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி